ரூ.300 செருப்பு ரூ.1.16 லட்சமா.. பேஷன் உலகில் புதிய டிரெண்ட் உருவாக்கிய இந்திய தயாரிப்பு..!!

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களையும் பாரம்பரிய கலைகளையும் கொண்ட ஒரு நாடு. இங்கே இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு என தனித்துவமான கலை நயம் மிக்க பொருட்களை கொண்டு இருக்கின்றன. அப்படி ஒன்றுதான் கோலாபூரி செருப்பு.

மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாபூர் நகரில் உருவாகக்கூடிய பாரம்பரியமான காலணி வகை இது. பல நூற்றாண்டுகளாக இந்தியர்கள் பெருமையுடன் விரும்பி அணியும் கோலாபூரி செருப்புகள். தோல் கொண்டு கோலாபூர் மக்களால் கைகளில் தயாரிக்கப்படுகிறது. இதன் தனித்துவமான வடிவமைப்பும், தரமும் எப்போதுமே மக்களை ஈர்க்கிறது. இந்திய பாரம்பரியம் கொண்ட இந்த செருப்பு சர்வதேச ஃபேஷன் அடையாளமாக மாறி இருக்கிறது.

ரூ.300 செருப்பு ரூ.1.16 லட்சமா.. பேஷன் உலகில் புதிய டிரெண்ட் உருவாக்கிய இந்திய தயாரிப்பு..!!

மிலன் நகரில் சர்வதேச ஆடம்பர நிறுவனமான பிரதா கோடைகால பேஷன் ஷோ நிகழ்ச்சியை நடத்தியது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாடல்கள் இதில் கலந்துகொண்டனர். இவ்வாறு கலந்து கொண்ட 56 மாடல்களில் ஏழு பேர் இந்தியாவின் பாரம்பரியம் கொண்ட கோலாபுரி செப்பல்களை அணிந்திருந்தனர். பிரதா நிறுவனம் இந்த செருப்புகளுக்கு 1.16 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்திருந்தது.

பிரதா மற்றும் ராப் சைமன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த செருப்புகளை தங்களின் பெயரில் விற்பனை செய்கின்றன. இந்திய பாரம்பரியம் கொண்ட செருப்புகளை கோலாபூரி செருப்பு என கூறாமல், தோல் செருப்பு என்ற பெயரில் விற்பனை செய்கின்றன. இந்தியாவின் கோலாபுரி செருப்புகளை இந்த நிறுவனங்கள் தங்களுடைய பெயரில் பிராண்டிங் செய்வது மட்டும் இல்லாமல், இந்தியாவில் இருந்து வந்தது என்பதையும் இந்திய கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்டது என்பதையும் ஏன் கூற மறுக்கின்றன என்பது தான் இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த செய்துள்ளது.

ரூ.300 செருப்பு ரூ.1.16 லட்சமா.. பேஷன் உலகில் புதிய டிரெண்ட் உருவாக்கிய இந்திய தயாரிப்பு..!!

எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பயனர் எழுதியுள்ள பதிவில் பிரதா நிறுவனம் கோலாபுரி செப்பல்களை 1.2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறது, மகாராஷ்டிரா மாநிலத்தின் பாரம்பரியத்தோடும் கோலாபுரி நகர மக்களால் கைகளால் தயாரிக்கப்படும் இந்த செப்பலை பிரதா நிறுவனம் தன்னுடைய லோகோ பதிவு செய்துவிட்டு லெதர் சாண்டல் என்ற பெயரில் விற்பனை செய்கிறது. இது ஆடம்பரம் அல்ல இது திருட்டு என சாடி இருக்கிறார் .

இந்தியாவில் 300 இல் இருந்து 1500 ரூபாய்க்கு கிடைக்க கூடிய இந்த செப்பல்களை இந்த நிறுவனம் 1.2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறது என்றும் கூறியிருக்கிறார். மற்றொரு பயனர் பிரதா நிறுவனம் இந்திய கைவினை கலைஞர்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வரும் வடிவங்களையும் கலையையும் பிரதான நிறுவனம் திருடி இருக்கிறது என கூறி இருக்கிறார், எங்களின் கலை வேண்டும், எங்களின் பாரம்பரியம் வேண்டும் ஆனால் அதற்கு உரிய அங்கீகாரத்தை வழங்கமாட்டீர்கள் இது ஒரு கலாச்சார திருட்டு என கூறியிருக்கிறார் .

ஒரு பயனர் கோலாபுரி செப்பலை வாங்கி விற்பனை செய்கிறீர்கள் ஆனால் கோலாபுரி என அதன் பெயரைக் கூறுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை எங்களின் அடையாளத்தை ஏன் திருடுகிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+