கூகுள் Adsense-ன் காட்பாதர் என அழைக்கப்படும் கோகுல் ராஜாராம் டெக் வல்லுனராக மட்டும் இருப்பது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் குவிந்திருக்கும் சிலிக்கான் வேலி பகுதியில் மிகவும் பிரபலமான முதலீட்டாளராக இருக்கும் ஏஞ்சல் முதலீட்டாளராக இருக்கிறார்.
கடந்த மாதம் கோகுல் ராஜாராம் அடுத்த 9 மாதத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோல்வி அடையும், மூடப்படும், பணிநீக்கம் செய்யும் என எச்சரித்தார். இது சிலிக்கான் வேலி பேங்க் திவாலாகி அரசு கைப்பற்றி வங்கி பணத்திற்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்ட பின்பு தெரிவித்தார். இப்போது இதை யாரும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் தற்போது நடப்பதை பார்க்கும்போது அச்சம் அதிகரித்துள்ளது.

கோகுல் ராஜாராம் சொன்னது போல் இந்தியாவிலும் முன்னணி ஐடி நிறுவனங்கள் முதல் EdTech துறையை தாண்டி பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தகத்தையும், லாபத்தையும் தக்க வைத்துக்கொள்ள பணிநீக்கம் செய்ய துவங்கியுள்ளது.
இந்த நிலையில் டிவிட்டருக்கு போட்டியாகவும், டிவிட்டரை போலவே இந்தியாவில் உருவாக்கப்பட்ட Koo நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 30 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 260 ஊழியர்கள் இந்த பணிநீக்கத்தின் மூலம் பணியை இழக்க உள்ளனர்.
இதுக்குறித்து Koo நிர்வாகம் கூறுகையில் ஜனவரி 2023 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்டிய பின்பு நிறுவனத்தின் நிதி நிலை சிறப்பாகவே உள்ளது. மேலும் புதிதாக நிதியை திரட்டும் எந்த திட்டமும் தற்போது இல்லை, மேலும் வருவாய் அளவிலும் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருக்கும் காரணத்தால் புதிய முதலீடுகள் தேவைப்படும் போது ஈர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2022ல் KOO நிறுவனம் சுமார் 15 ஊழியர்களை ஆப்ரேஷன்ஸ் மற்றும் பேக்என்ட் அணியில் இருந்து பணிநீக்கம் செய்தது. இதை தொடர்ந்து தற்போது 260 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மேலும் இக்காலக்கட்டத்தில் அனைத்து வர்த்தகமும் செயல்திறன் அடிப்படையிலும், செலவுகளை குறைக்கும் திட்டத்துடன் இயங்க வேண்டியது முக்கியம் எனவும் KOO தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல சமுக வலைத்தளம், டிஜிட்டல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் லாக்டவுன் காலத்தில் அதிகப்படியான ஊழியர்களை சேர்த்த நிலையில், தற்போது வர்த்தகம் வருமானம் ஆகியவை குறைந்த காரணத்தால் பணிநீக்கமும் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications