இந்தியாவில் வெளிநாட்டு சமூக வலைதளங்களுக்கு போட்டியாக பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டு பல போராட்டங்களுக்கு பின்பு குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டாலும், இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்வது பெரும் சுமையாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் போதுமான முதலீடுகள் இல்லாத காரணத்தால் இத்தகைய சமுகவலைத்தள நிறுவனங்கள் தொடர்ந்து பயணிக்க முடியாமல் மாட்டிக்கொள்கிறது.
அந்த வகையில் இந்தியாவில் பிரபலமான சமுக வலைதளமாக வலம் வந்த Koo, அதன் ஆரம்பக்கட்டத்தில் டிவிட்டருக்கு (X) போட்டியாக கருதப்பட்டது. ஆனால், தற்போது பல முக்கிய காரணத்தால் இந்நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் மூடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

KOO தளத்தை உருவாக்கிய நிறுவனர் அபிரமையா ராமகிருஷ்ணன் லின்ங்டுஇன் தளத்தில் வெளியிட்ட பதிவில், நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது சமூக வலைதள பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
KOO ஆப் பிரபல முதலீட்டு நிறுவனமான டைகர் குளோபல், ஏசல் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கி வந்தது. சமீப காலமாக கூ ஆப் நிதிநெருக்கடியில் மாட்டிக்கொண்டு தவித்து வந்த நிலையில், பல முதலீட்டு திரட்டும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை விற்க முயற்சி செய்தது, இதற்காக பல நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பல்வேறு சுற்று பேச்சுக்களுக்குப் பிறகும் இணைப்பு மற்றும் விற்பனை முயற்சிகளிலும் தோல்வியடைந்தது.
இதன் காரணமாக தற்போது KOO தளத்தின் ஆப்ரேஷன்ஸ் மொத்தமாக மூடப்பட்டு உள்ளதாக நிறுவனர் அபிரமேய ராமகிருஷ்ணன் லின்ங்டுஇன் தளத்தில் அறிவித்துள்ளார்.
"இந்தியாவில் இருந்து உலகளவில் போட்டியிடும் வகையிலான சமூக வலைதளம், செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளி, எலக்ட்ரிக் வாகனங்கள் அல்லது பிற எதிர்கால பிரிவுகளில் ப்ராடெக்ட்களை உருவாக்க நீண்ட கால முதலீடு அவசியம். ஏற்கனவே இந்த துறையில் உலகளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் போது இன்னும் அதிக முதலீடு தேவைப்படும்," என்று KOO தளத்தின் இணை நிறுவனரான Mayank Bidawatka உடன் இணைந்து அபிரமையா ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கூ தளம் இறுதியாக 3one4 Capital, Accel உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து 66 மில்லியன டாலர் மதிப்பிலான நிதியை திரட்டிய பின்னர், நிறுவனத்தின் மதிப்பு 275 மில்லியன் டாலராக இருந்தது.
அபிரமையா ராமகிருஷ்ணன் இதற்கு முன்னர் டாக்ஸிஃபார்சூர் (TaxiForSure) என்ற ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனத்தை தொடங்கியிருந்தார். இதை ஓலா தனது சேவையை தென்னிந்தியாவுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட போது 2015 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டது.
உலகளவில் போட்டியிடும் கனவுடன் தொடங்கப்பட்ட இந்திய சமூக வலைதளமான Koo, போதுமான நிதி கிடைக்காத காரணத்தால் தனது கதவை முட முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications