தென் கொரியாவில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒவ்வொரு முறையும் குழந்தை பிறக்கும் போது 100 மில்லியன் கொரியன் வோன் ($75,000) வழங்குகிறது. நாட்டின் மோசமான பிறப்பு விகிதத்தை சமாளிக்கும் முயற்சியில் இப்புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது என்று சிஎன்என் அறிக்கை தெரிவித்துள்ளது. 75000 டாலர் எனில் 62.25 லட்சம் ரூபாய்.
Booyoung குழுமம் 2021 முதல் 70 குழந்தைகளைப் பெற்ற அதன் தொழிலாளர்களுக்கு மொத்தம் 7 பில்லியன் கொரியன் வோன் ($5.25 மில்லியன்) ரொக்கமாகச் செலுத்தியுள்ளது. ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இருவரும் பயனடைவார்கள் என்றும் நிறுவனம் கூறியது.

குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெற்றோர்களையும் ஊக்குவிப்பதில் பங்களிக்கும் நிறுவனமாக நாங்கள் அங்கீகரிக்கப்படுவோம் என்று நம்புகிறேன் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் லீ ஜூங்-கியூன் தனது ஊழியர்களிடம் கூறினார்.
மூன்று குழந்தைகளுடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு 300 மில்லியன் கொரியன் வோன் ($225,000) ரொக்கமாகவோ அல்லது வாடகை வீடாகவோ பெறலாம். ஆனால் இந்த சலுகை பெற கொரியா அரசு கட்டுமானத்துக்காக நிலத்தை வழங்கினால் இந்த தேர்வு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
2022 ஆம் ஆண்டில், தென் கொரியா உலகளவில் குறைந்த கருவுறுதல் விகிதத்தை 0.78 ஆக பதிவு செய்துள்ளது, இது ஒரு பெண் தனது வாழ்நாளில் பெறும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. கொரியாவின் அதிகாரப்பூர்வ கணிப்புகளின்படி, அந்த எண்ணிக்கை 2025 இல் 0.65 ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கொரிய அரசும் பிற தனியார் அமைப்புகளும் குடிமக்களை அதிக குழந்தைகளைப் பெற ஊக்குவிக்க நிதி நன்மைகளை வழங்குகின்றன, ஆனால் இதுவரை யாரும் பூயோங் குழுமத்தின் அளவுக்குச் சலுகைகளை வழங்கவில்லை.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், நாட்டில் தற்போதுள்ள பிறப்பு விகிதத்தை மேம்படுத்தும் முயற்சியில் நாட்டிலுள்ள தம்பதிகள் தங்கள் குடும்பத்தில் கொஞ்சம் குட்டி டிராகனைச் சேர்க்க வலியுறுத்தினார்.
பூயாங் குழுமம் 1983 இல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, 270,000 வீடுகளை கட்டியுள்ளது. நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் கொரிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பூயாங் போன்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பணிகளை கொரிய அரசு செய்து வருகிறது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications