இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு கண்டிப்பாகத் தடை விதிக்கப்படமாட்டாது எனக் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மத்திய அரசும் நிதியமைச்சகமும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை ஒழுங்கு முறைப்படுத்தத் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் எப்போது மத்திய நிதியமைச்சகம் புதிய கிரிப்டோ மசோதா-வை தாக்கல் செய்யும் என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான கோட்டாக் மஹிந்திரா வங்கி முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது.
இந்தியாவில் முன்னணி வங்கிகள் தொடர்ந்து கிரிப்டோ முதலீட்டுக்கும், வர்த்தகத்தில் இருந்தும் விலகி இருக்கும் நிலையில், கோட்டாக் மஹிந்திரா வங்கி இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான WazirX உடன் புதிய வர்த்தகக் கூட்டணியை உருவாக்கியுள்ளது.

கோட்டாக் மஹிந்திரா வங்கியில் WazirX புதிய வங்கி கணக்கை திறந்துள்ளது. இந்தக் கணக்கின் மூலம் WazirX வர்த்தகத் தளத்தின் முதலீட்டாளர்களின் பணத்தைப் பெறவும், திரும்பச் செலுத்துவதற்காகப் பயன்படுத்த உள்ளது. இந்தக் கணக்கு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், தற்போது முக்கிய நிர்வாகப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு WazirX ரிசர்வ் வங்கியின் தடையின் காரணமாக ஐசிஐசிஐ வங்கியில் வைத்திருந்த கணக்கை மூடிவிட்டு மொத்த முதலீட்டாளர்களின் வர்த்தகக் கணக்கை மொபிகுவிக் தளத்திற்கு மாற்றி இதுநாள் வரையில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி தடையை நீக்கிய பின்பு, மத்திய அரசு கிரிப்டோ வர்த்தகச் சந்தையை ஒழுங்குமுறை செய்ய நடவடிக்கை எடுத்துள்ள வேளையில் WazirX கோட்டாக் மஹிந்திரா வங்கியுடன் கூட்டணியைத் துவங்கியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications