டெல்லி: உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிலையில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொரோனாவின் கொடூரா தாக்கத்தினால் உலகம் முழுவதும் கிட்டதட்ட 34,000 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இந்தியாவிலும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள், கொரோனாவின் இந்த கொடிய தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க பல லட்சம் கோடிகளை நிதியுதவியாக ஒதுக்கி வருகின்றன.
நிதியுதவி அளிக்கலாம்
ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து நாடுகளில் அது சாதகமானது இல்லை என்றாலும், மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதே இதற்கு சிறந்த வழியாக கூறப்படுகிறது. மேலும் தொழிலதிபர்கள், மக்கள் என தங்களால் முடிந்த மட்டில் நிதியுதவியாக அளிக்கலாம் என பிஎம் கேர்ஸ் பன்ட் என்ற திட்டத்தினை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு.
ரூ.50 கோடி நிதி
இந்த நிலையில் பல்வேறு தொழிலதிபர்களும், தனி நபர்களும் தங்களால் முடிந்த நிதியினை அதற்கு அனுப்பியும் வருகின்றனர். இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக நிவாரணத் தொகை அளிக்கலாம் என்று பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, கோட்டக் மகேந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டக் தனிப்பட்ட முறையில் 50 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பொருளாதாரம் பெரும் பின்னடைவு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா 1000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டில். தற்போது 21 நாட்கள் ஊரடங்கை அமலில் இருப்பதால், நாட்டில் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே இல்லை. இதனால் இந்தியா பொருளாதார ரீதியிலாகவும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்தியாவுக்கு இழப்பு தான்
இதனால் இந்தியா பெரும் பொருளாதார இழப்பினை சந்தித்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.
பிரதமர் அறிவிப்புக்கு பலன்
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். அந்தவகையில் கோட்டக் மகேந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டக் 50 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் இந்த தொகையை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். .
மக்களை காக்க உதவி
உதய் கோட்டக் அறிவித்துள்ள 50 கோடி ரூபாயில் 25 கோடி ரூபாயினை உடனடியாக வழங்குவதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எது எப்படியோங்க.. இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் தான் பல நல்ல விஷயங்கள் தெரிய வருகிறது. இது ஏழை எளிய மக்களுக்கு உதவும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லையே.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications