இந்தியாவின் மிக முக்கிய தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டக் மஹிந்திரா வங்கியின் டிசம்பர் 2019க்கான, காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் இந்த டிசம்பர் 2019 காலத்திற்கு ஆயிரத்து 595 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இந்த நிகர லாபம் கோட்டக் மஹிந்திரா வங்கியின் stand-alone கணக்கு மட்டும் தானாம்.
இந்த டிசம்பர் 2019 காலாண்டில், கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் அதிகரித்து இருப்பதற்கு, மற்ற other income என்று சொல்லப்படுகிற மற்ற வருவாய் அதிகரித்து இருப்பது மற்றும் வரி செலவுகள் குறைந்து இருப்பதை ஒரு முக்கிய காரணமாக சொல்கிறார்கள்.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிகர வட்டி வருமானம் 17.2 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது டிசம்பர் 2018 காலத்துடன் ஒப்பிட்டு வந்த கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிசம்பர் 2019 காலத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிகர வட்டி வருமானம் 3,429 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2019 காலண்டில் ஈட்டிய நிகர வட்டி வருமானத்தை விட டிசம்பர் 2019 காலாண்டில் ஈட்டிய நிகர வட்டி வருவாய் 2.4 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம்.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் அதர் இன்கம் என்று சொல்லப்படுகிற மற்ற வருவாய்கள், சுமார் 37 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். டிசம்பர் 2018 காலாண்டில் ஈட்டிய மற்ற வருவாயை விட 37% அதிகமாக இந்த டிசம்பர் 2019 காலண்டில் ஈட்டி இருக்கிறார்களாம்.
டிசம்பர் 2019 காலண்டில், கோட்டக் மஹிந்திரா வங்கியின் மற்ற வருவாய் 1,341 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகள் என்றால் வாராக்கடன் இல்லாமலா..? கோட்டக் மஹிந்திரா வங்கியிலும் வாராக் கடன்கள் இந்த டிசம்பர் 2019 காலாண்டில் அதிகரித்து இருக்கின்றதாம். கோட்டக் மஹிந்திரா வங்கியின் (Gross NPA) தோராய வாராக் கடன்கள் டிசம்பர் 2019 காலாண்டில் 2.46 சதவீதமாக அதிகரித்து இருக்கிறதாம். கடந்த செப்டம்பர் 2019 காலங்களில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் தோராய வாரா கடன் 2.32 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.