மத்திய அரசு வரி வசூல் அளவை அதிகரிக்கவும், வரியை அரசுக்கு செலுத்த மக்களுக்குப் பல வழிகளை உருவாக்கி வரும் நிலையில் தற்போது முதல் முறையாக ஒரு தனியார் வங்கியான கோட்டாக் மஹிந்திரா வங்கிக்கு வருமான வரி, ஜிஎஸ்டி உட்பட அனைத்து நேரடி மற்றும் மறைமுக வரியை தனது வங்கி நெட்வொர்க் மூலம் வசூலிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கோட்டாக் மஹிந்திரா வங்கி
இதன் மூலம் கோட்டாக் மஹிந்திரா வங்கி இனி தனது வங்கி கிளைகளில் அனைத்து விதமான அரசு வரிகளையும் வசூலிக்க முடியும். இது வரி வசூலில் மத்திய அரசுக்கும் தனியார் அமைப்புக்கும் மத்தியில் மிகப்பெரிய கூட்டணியாக உள்ளது.
நிர்மலா சீதாராமன் ஒப்புதல்
அரசு தொடர்பான சேவைகளில் அனைத்து வங்கிகளும் பங்குபெற வேண்டும் என்ற திட்டத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாகத் தனியார் வங்கி பிரிவில் நேரடி மற்றும் முறைமுக வரியை வசூல் செய்யக் கோட்டாக் மஹிந்திரா வங்கிக்கு மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார்.
வரி வசூல்
வரி வசூல் சேவைக்கான தொழில்நுட்ப இணைப்புகளைக் கோட்டாக் மஹிந்திரா வங்கி உடன் செய்யப்பட்ட பின்பு, இவ்வங்கி வாடிக்கையாளர்கள் நேரடியாகத் தங்களது நேரடி வரி மற்றும் மறைமுக வரியை செலுத்த முடியும்.
வங்கி வாடிக்கையாளர்கள்
இதுமட்டும் அல்லாமல் வங்கி வாடிக்கையாளர்கள் வரியை கோட்டாக் மஹிந்திரா வங்கியின் மொபைல் பேங்கிங் அல்லது நெட் பேங்கிங் வாயிலாக வீட்டில் இருந்தபடியே எளிதாக செய்யலாம். இல்லையெனில் கோட்டாக் மஹிந்திரா வங்கி கிளைக்கு நேரடியாகச் சென்று கூட வரியை செலுத்தலாம்.
வர்த்தகம் மற்றும் தனிநபர் வரி
இப்புதிய சேவை மூலம் தனியார் வங்கி வாடிக்கையாளர்கள் மிகவும் எளிதாகத் தங்களது வர்த்தகம் மற்றும் தனிநபர் வருமானத்திற்கு வரியை செலுத்த முடியும். மேலும் மத்திய அரசு கோட்டாக் மஹிந்திரா வங்கிக்குக் கொடுத்துள்ள இந்த அனுமதியைப் பார்க்கும் போது அரசு இவ்வங்கி மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கோட்டாக் மஹிந்திரா வங்கி - தீபக் குப்தா
இதுகுறித்து கோட்டாக் மஹிந்திரா வங்கியின் இணை நிர்வாகத் தலைவர் தீபக் குப்தா கூறுகையில், மத்திய அரசு நேரடி மற்றும் மறைமுக வரியை வசூலிக்கக் கோட்டாக் மஹிந்திரா வங்கிக்கு அனுமதி அளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது. இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரி செலுத்த எளிய வகையில் சேவை அளிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
கோட்டாக் மஹிந்திரா வங்கி பங்குகள்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் கோட்டாக் மஹிந்திரா வங்கி பங்குகள் 0.45 சதவீத சரிவைப் பதிவு செய்து 1,982.65 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 2,008.85 வரையில் கோட்டாக் மஹிந்திரா வங்கி பங்குகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications