கடந்த மாதம் உதய் கோட்டக் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அசோக் வாஸ்வானி-யை வங்கியின் அடுத்த நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (MD மற்றும் CEO) நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளதாக கோட்டக் மஹிந்திரா வங்கி அக். 21 ஆம் தேதி தெரிவித்துள்ளது.
கோட்டக் வங்கியுடன் அவர் 21 ஆண்டுகள் அசோக் வாஸ்வானி இணைந்து பணியாற்றி வருகிறார். வாஸ்வானி ஆரம்பத்தில் சிட்டி குழுமத்தில் 35 வருடங்களாக வங்கியாளராக இருந்தார், இதை தொடர்ந்து பார்க்லேஸ் நிறுவனத்தின் முக்கிய பதலியில் இருந்தார்.

அசோக் வாஸ்வானி பிரிட்டனின் பார்க்லேஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், அதன் பிறகு உலகளாவிய நுகர்வோர், தனியார், கார்ப்பரேட் மற்றும் பணம் செலுத்தும் வணிகங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் குழு நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
முன்னதாக, அவர் சிட்டிகுரூப் ஆசிய பசிபிக் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், சிட்டிகுரூப் குளோபல் ஆப்பரேட்டிங் & மேனேஜ்மென்ட் கமிட்டிகளின் உறுப்பினராகவும் இருந்தார்.
தற்போது, கோட்டக் மஹிந்திரா வங்கியின் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர், பகாயா டெக்னாலஜிஸ் லிமிடெட் - அமெரிக்க-இஸ்ரேலிய AI ஃபின்டெக் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
அவர் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் குழுமத்தின் குழுவிலும், SP ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட், UK, மற்றும் பிரதம் மற்றும் லென்ட்-ஏ-ஹேண்ட் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களை ஆதரிக்கிறார்.
இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனத்தில் கணினி அறிவியலில் (CS) பட்டமும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் நிர்வாகக் கல்வியும் பயின்றார். வாஸ்வானி இந்தியாவில் பிறந்தார் மற்றும் வீணா என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரும் இயக்குநருமான உதய் கோட்டக் வாஸ்வானியைப் பற்றி பேசுகையில், "அசோக் ஒரு சர்வதேச அளவில் சிறப்பான தலைவர். டிஜிட்டல் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வங்கியாளர்.
இதற்கிடையில், வாஸ்வானியின் நியமனம், பொறுப்பேற்ற நாளிலிருந்து மூன்று வருட காலத்திற்கு இருக்கும்.மேலும் நியமிக்கப்படும் நாள் ஜனவரி 1, 2024 க்குப் பிறகு இருக்கக்கூடாது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications