இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோடக் மஹிந்திரா வங்கி வியாழன் வர்த்தகத்தில் அதன் பங்குகள் 4% சரிந்து 52 வாரங்களில் இல்லாத புதிய சரிவான ரூ.1,552.40 அளவீட்டை எட்டியது.
ஏற்கனவே ஆர்பிஐ விதித்த கட்டுப்பாடுகள், தடைகள் என கோடக் மஹிந்திரா வங்கியின் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியிருந்த வேளையில் அடுத்த முக்கிய பிரச்சனையாக இவ்வங்கி இணை நிர்வாக இயக்குநர் கேவிஎஸ் மணியன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் மோசமான செய்தியாக மாறியுள்ளது.

இந்த நிலையில் உள்நாட்டு தரகு நிறுவனமான நுவாமா, கோடக் மஹிந்திரா வங்கி பங்குகளை BUY என்ற தரத்தில் இருந்து REDUCE என குறைத்துள்ளது. இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி செய்தியாக உள்ளது.
ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் சேனல்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதிலும் மற்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்த நிலையில் கடந்த வாரம் கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் 10% சரிவில் முடிந்தது.
ஆர்பிஐ தடைக்கு சில மாதங்களுக்கு முன்பு வங்கிகளில் முழு நேர இயக்குநர்களின் பதவிக்காலம் மீதான ரிசர்வ் வங்கியின் வரம்பு காரணமாகத் தலைமை நிர்வாக அதிகாரி உதய் கோடக் மற்றும் இணை நிர்வாக இயக்குனராக இருந்த தீபக் குப்தா ஆகியோர் வெளியேறினர். இதைத் தொடர்ந்து தற்போது KVS மணியன் வெளியேற்றம் வந்துள்ளது.
இப்படி அடுத்தடுத்த பிரச்சனைகள் மூலம் கோடக் மஹிந்திரா வங்கியில் குறைந்தது 12-18 மாதங்களுக்கு வளர்ச்சி மற்றும் லாபத்தைப் பாதிக்கும் என்று தரகு நிறுவனங்கள் கணித்துள்ளது, மேலும் இலக்கு விலையை ரூ.2,095ல் இருந்து ரூ.1,530 ஆகக் குறைத்துள்ளது.
மூத்த அதிகாரி வெளியேற்றம், ஆர்பிஐ தடை ஆகியவற்றைக் காரணம் காட்டி கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலையை ரூ.1,970 என்ற இலக்கு விலையாக ஜெஃப்ரிஸ் நிர்ணயம் செய்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கியின் இணை நிர்வாக இயக்குனராக இருந்த KVS மணியன், ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் படி மே 1 முதல் தனது பதவியில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்தார்.
இந்த செய்தி கோடக் மஹிந்திரா வங்கி ஊழியர்களையும், இவ்வங்கி முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இப்போது KVS மணியன் ஃபெடரல் வங்கியில் சேர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications