கோயம்புத்தூர் டூ கிருஷ்ணகிரி.. மத்திய அரசின் மெகா திட்டம் துவக்கம்.. இனி மக்களுக்கு காசு மிச்சம்..!

பிரதமர் மோடியின் திருச்சி பயணத்தில் பிரதமர் மோடி மொத்தம் ரூ.20,140 கோடி மதிப்பிலான 20 திட்டங்களையும் நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தது மட்டும் அல்லாமல் பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

இதில் முக்கியமான திட்டம் தான் KKBMPL, இந்த மாபெரும் திட்டத்தில் பெரிய அளவில் பலன் பெறுவது தமிழ்நாடு தான், இந்த ஒரு திட்டம் மூலம் உற்பத்தி துறையில் இருந்து குடும்பங்கள் வரையில் பல தரப்பு மக்களின் செலவுகள் குறைவது மட்டும் அல்லாமல் மாநிலத்தின் பணவீக்கம் குறைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

கோயம்புத்தூர் டூ கிருஷ்ணகிரி.. மத்திய அரசின் மெகா திட்டம் துவக்கம்.. இனி மக்களுக்கு காசு மிச்சம்..!

மத்திய அரசு நாட்டின் எரிசக்தி தேவையில் இயற்கை எரிவாயு பங்கீட்டை தற்போதைய 6.7 சதவீதத்தை 15 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காகவே கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 3 முக்கிய மாநிலங்களைத் தேசிய எரிவாயு கிரிட்-ல் இணைக்கும் முக்கியமான பைப்லைன் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்தது.

இத்திட்டத்திற்காகக் கொச்சி, குட்டநாட், பெங்களூர், மங்களூர் பைப்லைன் என்ற KKBMPL திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் முதல் பகுதி மங்களூர் முதல் கேரள மாநிலம் குட்டநாட் வரை பைப்லைன் அமைக்கப்படுகிறது. 2வது கட்டத்தில் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டின் 7 முக்கிய மாவட்டங்களைக் கடந்த கேரளாவில் குட்டநாட் உடன் இணைந்து. பின்பு கொச்சி வரையில் நீள்கிறது.

இன்று திருச்சி பயணத்தில் பிரதமர் மோடி சுமார் 294 கிலோமீட்டர் தொலைவிலான கிருஷ்ணகிரி - கோயம்புத்தூர் மத்தியிலான இயற்கை எரிவாயு பைப்லைன் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்தத் திட்டம் மூலம் தமிழ்நாட்டுத் தொழிற்துறைக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன நன்மை..?

இந்தத் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகள், வீடுகள், போக்குவரத்து வாகனங்கள் (CNG வாகனங்கள்) ஆகியவற்றுக்கு மலிவு விலையில் இயற்கை எரிவாயுவைப் பெற முடியும். இத்திட்டத்தில் பெரும் பகுதிகளின் கட்டுமானம் முடிவடைந்துள்ள வேளையில் நவம்பர் 2024 முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.

இத்திட்டம் 2915 கோடி ரூபாயில் அமைக்கப்படும் எனத் துவக்கத்தில் அறிவிக்கும் போது கணக்கிடப்பட்ட நிலையில், தற்போது 5909 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்படும் எனத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. 2012ல் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் நவம்பர் மாதம் 2024ல் முடிக்கப்படும் எனத் தெரிகிறது

294 கிலோமீட்டர் தொலைவிலான கிருஷ்ணகிரி - கோயம்புத்தூர் மத்தியிலான இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டத்தில் தற்போது கிருஷ்ணகிரி டூ சேலம் வரையிலான பணிகள் நடந்துகொண்டு வருகிறது.

இந்தத் திட்டம் மூலம் தமிழ்நாட்டிலும் பைப் வாயிலாக வீட்டிற்கு எரிவாயு சப்ளை செய்யும் திட்டம் வேகமாக விரிவாக்கம் செய்யப்படும் வாய்ப்புகளும் உள்ளது. மேலும் இந்தத் திட்டத்தை மத்திய அரசின் GAIL நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+