வோடபோன் பங்குகளை அரசிடம் ஒப்படைக்க தயார்.. குமார் மங்கலம் பிர்லா அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதித்யா பிர்லா குழுமத்தில் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, பெருத்த கடன் பிரச்சனையில் உள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தில் உள்ள தனது பங்கினை அரசுக்கோ அல்லது நிறுவனத்தினை செயல்படுத்த தகுதியான வேறு எந்த தகுதியான நிறுவனத்திடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கபாவுக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த தகவல்களின் படி, வோடபோன் ஐடி நிறுவனத்தின் சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் விகிதமானது (AGR) 58,254 கோடி ரூபாயில், 7,854.37 கோடி ரூபாயினை வோடபோன் நிறுவனம் செலுத்தியுள்ளதாகவும், மீதம் நிலுவையில் 50,399.63 கோடி ரூபாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சலுகைகள் வாரி இறைப்பு

சலுகைகள் வாரி இறைப்பு

தொலைத் தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர், மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க முடியாமல் மிகுந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டன. இதனால் நிறுவனங்கள் தங்களது லாபத்தினை மறந்து, வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள சலுகைகளை வாரி வழங்கின.

வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் போர்க்கொடி

வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் போர்க்கொடி

ஏற்கனவே பொருளாதார மந்த நிலை காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்த நிறுவனங்கள், லாபத்தினையும் கோட்டை விட்டன. இதற்கிடையில் தான் பேரிடியாய் ஏஜிஆர் நிலுவை பற்றிய அறிவிப்பும் வந்தது. ஆரம்பத்தில் வோடபோன் ஐடியா நிறுவனமும், பார்தி ஏர்டெல் நிறுவனமும் போர்க்கொடி தூக்கின. இதற்காக உச்ச நீதிமன்றத்தையும் அணுகியது. ஆனால் அந்த மனுவானது நிராகரிக்கப்பட்டது.

தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் உரிம கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை வருவாய் பங்கு வடிவத்தில் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தொலைத் தொடர்பு துறை அறிவித்துள்ளது. இந்த வருவாய் பங்கைக் கணக்கிட பயன்படுத்தப்படும் வருவாய் தொகை AGR என அழைக்கப்படுகிறது. இதைத் தான் மத்திய தொலைத் தொடர்பு துறையும், தொலைத் தொடர்பு நிறுவனங்களை செலுத்த வலியுறுத்தி வந்தது.

 

சிக்கலுக்கு மேல் சிக்கல்

சிக்கலுக்கு மேல் சிக்கல்

இதற்கு பிற ஏற்கனவே கடன் பிரச்சனையில் இருந்த வோடபோன் நிறுவனம் மேலும் பலத்த சிக்கலை சந்தித்தது. இந்த நிலையில் கடனை செலுத்த முதலீட்டாளர்களை அணுகியது. ஆனால் அதுவும் கைகொடுக்காத நிலையிலேயே குமார் மங்கலாம் இப்படி ஒரு கடித்தத்தினை அனுப்பியிருக்கலாம் என தெரிகிறது.

முதலீட்டாளர்கள் தயாராக இல்லை

முதலீட்டாளர்கள் தயாராக இல்லை

வோடபோன் ஐடியாவில் சுமார் 27% பங்கினை வைத்திருக்கும் பிர்லா, முதலீட்டாளர்கள் கடனுடன் உள்ள இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராக இல்லை. இதனால் வோடபோன் நிறுவனம் மீள முடியா சரிவுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆக அரசின் உதவி இல்லாவிட்டால் நிறுவனம் என்ன நிலைக்கு செல்லும் என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

பெரிய பூட்டாக போட வேண்டியது தான்

பெரிய பூட்டாக போட வேண்டியது தான்

ஏற்கனவே ஒரு அறிக்கையில் அரசு ஏதும் நிவாரணம் வழங்காவிட்டால், நிறுவனத்திற்கு பெரிய பூட்டாக போட வேண்டியது தான் என்றும் குமார் மங்கல பிர்லா கூறியிருந்தார். இந்த நிலையில் அரசுக்கு எழுதிய கடிதம் நிறுவனம் எந்தளவுக்கு நிதிச்சுமையில் இருக்கிறது என்பதை சுட்டி காட்டுகின்றது.

இது எனது கடமை

இது எனது கடமை

வோடபோன் நிறுவனம் 27 கோடி இந்தியர்களை இணைக்கிறது. ஆக அதனை கருத்தில் கொள்ள வேண்டியது எனது கடமை. ஆக எனது பங்குகளை நான் அரசிடம்/பொதுத்துறை நிறுவனம் அல்லது அரசு கருத்தில் கொள்ளக் கூடிய எந்த நிறுவனத்திலும் ஒப்படைக்க தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்த கடன் எவ்வளவு?

மொத்த கடன் எவ்வளவு?

எனினும் இந்த விவகாரம் குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. சமீபத்தில் இந்த நிறுவனம் 25,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்ட நிலையில், அப்படி ஏதும் நடக்க வில்லை எனலாம். மார்ச் 31 நிலவரப்படி 1,80,310 கோடி கடன் நெருக்கடியில் வோடபோன் நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kumar mangalam birla offers to hand over Vodafone idea stake to govt; check details

India’s billionaire Kumar mangalam birla offers to hand over Vodafone idea stake to goverment
Story first published: Monday, August 2, 2021, 20:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X