கும்பகோணத்து ஐயர் உருவாக்கிய பல்லாயிரம் கோடி பிஸ்னஸ்.. வேற லெவல்..!

சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி.. ஏன் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என வெளிநாட்டிலும், வெளியூர்களிலும் மாத சம்பளத்தில் பணியாற்றும் பெரும்பாலானோர்-க்கு இருக்கும் ஒரு ஆசை...

சொந்தமாக ஒரு தொழில் துவங்க வேண்டும் என்பது தான். இதில் பல சவால்கள் இருந்தாலும் மெல்ல மெல்ல உயரும் போது இந்த சுமை தெரியாது, அதேபோல் நீண்ட கால அடிப்படையில் பெரிய அளவிலான லாபத்தை அடைய முடியும் என்பது அனைவருடைய நம்பிக்கை.

கும்பகோணத்து ஐயர் உருவாக்கிய பல்லாயிரம் கோடி பிஸ்னஸ்.. வேற லெவல்..!

அப்படி தான் 1909ல் கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் கோவிலில் ஐயர் ஆக இருந்து பின்னாளில் தொழிலதிபராக மாறி, இன்று இவருடைய தலைமுறையினர் இந்த வர்த்தகத்தை பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக சாம்ராஜ்ஜியமாக மாற்றியுள்ளனர். யார் இந்த கும்பகோணத்து ஐயர்..?

கும்பகோணத்தை சேர்ந்த கல்யாணராமா என்பவர் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சென்று டெக்ஸ்டைல் துறையில் சிறு சிறு வர்த்தகத்தை 1909ல் துவங்குகிறார். பின்னாளில் வர்த்தகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக 1930ல் கேரள மாநிலத்தில் திருச்சூர்-ல் ஒரு டெக்ஸ்டைல் மில் துவங்குகிறார், ஆனால் அடுத்த சில வருடத்தில் கேரள அரசின் புதிய விதிமுறை காரணத்தால் கல்யாணராமா-வின் டெக்ஸ்டைல் மில் அரசால் கைப்பற்றப்படுகிறது.

இந்த மாபெரும் சரிவில் மனம் தளராத கல்யாணராமா இதே திருச்சூர்-ல் துணிக்கடை துவங்குகிறார். இக்காலக்கட்டத்தில் கல்யாணராமா-வின் மகன் சீதாராமா-வும் வர்த்தகத்திற்கு துணை நிற்கிறார். அப்பா மகன் கூட்டணியில் சிறிய துணிக்கடையாக இருந்து அடுத்த சில வருடத்தில் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக மாறுகிறது.

இந்த பயணத்தில் சீதாராமா தனது சொத்துக்கள், வர்த்தகம் அனைத்தையும் தனது 5 பிள்ளைகளுக்கு பிரிந்துக்கொடுக்கிறார். கல்யாணராமா-வின் பேர பிள்ளைகள் மிகவும் குறுகிய காலக்கட்டத்தில் பெரிய அளவிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் பல துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தனர்.

கும்பகோணத்து ஐயர் உருவாக்கிய பல்லாயிரம் கோடி பிஸ்னஸ்.. வேற லெவல்..!

கல்யாணராமா மற்றும் அவரது மகன் சீதாராமா இணைந்து நிர்வாகம் செய்து வந்த ஒரு துணிக்கடை இப்போது கல்யாண் சில்க்ஸ், கல்யாண் சாரீஸ், கல்யாண் கலெக்ஷன், கல்யாண் ஜுவல்லர்ஸ் என விரிவாக்கம் அடைந்துள்ளது. இந்த அனைத்து வர்த்தகமும் தற்போது கல்யாண் குரூப் என்ற தனது தாத்தாவின் பெயர்களில் தற்போது இயங்கி வருகிறது.

சீதாராமா மகன்களான டி.எஸ்.கல்யாணராமன் தற்போது கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாகம் செய்து வருகிறார், டி.எஸ். பட்டாபிராமன் தற்போது கல்யாண் சில்க்ஸ் நிர்வாகம் செய்து வருகிறார், டி.எஸ்.ராமச்சந்திரன் தற்போது கல்யாண் சேரீஸ் நிர்வாகம் செய்து வருகிறார். கல்யாண் குரூப்-ல் Kalyan Developers என்ற மற்றொரு நிறுவனமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+