ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்ட லூலூ குழுமத்தின் தலைவர் எம்.ஏ. யூசுப் அலி, குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் உட்பட 49 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தெற்கு மங்காஃப் நகரில் 196 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த ஏழு மாடி கட்டிடத்தில் இந்த வாரம் புதன்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 49 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அபுதாபியில் உள்ள லுலு குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழந்த 49 பேரில், 42 பேர் இந்தியர்கள், அதிலும் முக்கியமாக 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு மற்றும் கேரள அரசும் இதேபோல 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளன.

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வியாழக்கிழமை குவைத் சென்று, தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களை நேரில் சந்தித்தார். காயமடைந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் கேரளா-வை பூர்வீகமாகக் கொண்டு வளைகுடா நாடுகளில் பெரும் வர்த்தகம் சார்ஜ்ஜியம் வைத்திருக்கும் மற்றொரு தொழிலதிபரான ரவி பிள்ளையும் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications