குவைத் தீ விபத்து: லூலூ மால் ஓனர் யூசுப் அலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்ட லூலூ குழுமத்தின் தலைவர் எம்.ஏ. யூசுப் அலி, குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் உட்பட 49 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தெற்கு மங்காஃப் நகரில் 196 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த ஏழு மாடி கட்டிடத்தில் இந்த வாரம் புதன்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 49 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குவைத் தீ விபத்து: லூலூ மால் ஓனர் யூசுப் அலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அபுதாபியில் உள்ள லுலு குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழந்த 49 பேரில், 42 பேர் இந்தியர்கள், அதிலும் முக்கியமாக 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு மற்றும் கேரள அரசும் இதேபோல 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளன.

குவைத் தீ விபத்து: லூலூ மால் ஓனர் யூசுப் அலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வியாழக்கிழமை குவைத் சென்று, தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களை நேரில் சந்தித்தார். காயமடைந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் கேரளா-வை பூர்வீகமாகக் கொண்டு வளைகுடா நாடுகளில் பெரும் வர்த்தகம் சார்ஜ்ஜியம் வைத்திருக்கும் மற்றொரு தொழிலதிபரான ரவி பிள்ளையும் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+