கோடக் மஹிந்திரா வங்கியின் இணை நிர்வாக இயக்குனராக இருந்த KVS மணியன், நேற்று மாலை பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் படி இன்று முதல் தனது பதவியில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்தார்.
இந்த செய்தி இன்று காலை கோடக் மஹிந்திரா வங்கி ஊழியர்களையும், இவ்வங்கி முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இப்போது KVS மணியன் ஃபெடரல் வங்கியில் சேர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிருஷ்ணன் வெங்கட் சுப்ரமணியன் (KVS மணியன்) முழு நேர இயக்குநர், இணை நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து விலகுகிறார், அவர் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்ததை தொடர்ந்து அதை வங்கி நிர்வாகம் ஏற்றுக்கொடுள்ளது.
இதை தொடர்ந்து கோடக் மஹிந்திரா வங்கி பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில், வங்கியின் இணை நிர்வாக இயக்குநராக இருக்கும் கே.வி.எஸ்.மணியன், ஏப்ரல் 30 அன்று வங்கியிலிருந்தும், பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாகவும், இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேவிஎஸ் மணியன் அவர்கள் கோடக் மஹிந்திரா வங்கி நிர்வாகத்துக்கு சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தில், "நிதிச் சேவை துறையில் பிற வாய்ப்புகளைத் தொடர்வதற்காக கோடக் மஹிந்திரா வங்கியில் எனது பதவிகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன். இதன் விளைவாக, நான் நிர்வாக குழுவிலிருந்தும் விலகுகிறேன்." என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியாகி 24 மணிநேரத்திற்குள் ஃபெடரல் வங்கியில் சேர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடக் மஹிந்திரா வங்கியில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் KVS மணியன். இவ்வங்கியில் ஜனவரி மாதம் நடந்த நிர்வாக மறுசீரமைப்பில் பதவி உயர்வு பெற்று அசத்திய வேளையில் ஆர்பிஐ நடவடிக்கைக்குப் பின்பு தற்போது இவருடைய ராஜினாமா செய்தி வந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications