இந்திய ராணுவத்தின் பலம் பல மடங்கு அதிகரிக்க உள்ளது, குறிப்பாக ஆயுத பலம் அதிகரிக்க உள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை கடந்த வாரம் மாபெரும் ஆயுத கொள்முதல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதன் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்புத் துறை லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனத்துடன் 7,628 கோடி ரூபாய் மதிப்பிலான 100 தானியங்கி துப்பாக்கிகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 100 K9 வஜ்ரா துப்பாக்கிகள் அதாவது ஆர்டில்லரி துப்பாக்கிகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக லடாக் போன்ற உயரமான பகுதிகளில் இந்த துப்பாக்கிகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்துள்ளதைத் தொடர்ந்து தற்போது அடுத்தக்கட்ட ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது.

பல துறையில் சிறந்து விளங்கும் லார்சன் & டூப்ரோ பாதுகாப்புத் துறை ஆயுதங்களைத் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில் பீரங்கி அமைப்பான K9 வஜ்ரா ஆயுதத்தை இந்நிறுவனம் மிகவும் சிறப்பான முறையில் ஹசிசா தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளது.
K9 வஜ்ரா ஆயுத நீண்ட தூரம், துல்லியமான மற்றும் தாக்கும் கருவியாகும். மைனஸ் டிகிரி உள்ளிட்ட கடுமையான வானிலைகளில் திறம்பட செயல்படும் திறன் கொண்டது இது, இதன் மூலம் சமீப காலத்தில் இது இந்திய ராணுவத்திற்கு மதிப்புமிக்க சொத்தாக மாறியுள்ளது
மத்திய பாதுகாப்பு துறை, லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனத்துடனான 7,628 கோடி ரூபாய் மதிப்பிலான 100 தானியங்கி துப்பாக்கிகளைக் கொள்முதல் திட்டம் மூலம் நான்கு ஆண்டுகளில் ஒன்பது லட்சம் பணிநேரம் வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறையிடமிருந்து ரூ.13,500 கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், பாதுகாப்புத் துறை பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தியாவின் பாதுகாப்புத் துறை தற்போது நவீனமயமாக்கல் மற்றும் உள்நாட்டில் தயாரிப்பில் முன்னேறி வருவதால், பாதுகாப்புத் துறை பங்குகளில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு ஈர்க்கும் களமாக மாறி வருகிறது.
இந்திய அரசு, பாதுகாப்புத் துறையில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உள்நாட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் விளைவாக, பாதுகாப்புத் துறையில் செயல்படும் நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபம் அதிகரித்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications