மும்பை: இந்தியா கொரோனாவுக்கு எதிரான பெரிய யுத்தத்தினை மேற்கொண்டு வரும் நிலையில், நன்கொடை வழங்க அனைத்து தரப்பு மக்களும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது நிச்சயம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கு இது வழிவகுக்கும். அதாவது கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையிலும் இது உதவும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிதியினை PM CARES என்கிற பெயரில் நிதி பெறுவதற்கான வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. ஆக மக்கள் pmindia.gov.in எனும் இணையதளத்திற்கு சென்று பொதுமக்கள் நிதி வழங்கலாம் என்றும் பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதையடுத்து பலரும் நிதியினை வாரி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம்
இந்த நிலையில் நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான larsan & Turbo (L&T) நிறுவனம், தனது 1,60,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக மாதத்திற்கு 500 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளது. இது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் இருக்கும் ஒப்பந்த ஊழியர்கள், மற்றும் தங்களது முகாம்களில் தங்கியிருக்கும் ஊழியர்களுக்கும் போதுமான அடிப்படை வசதிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பராமரிப்பு நடவடிக்கை
மேலும் நிறுவனம் சுகாதாரம் மற்றும் கழிவு சுகாதாரத்தினை பராமரித்து வருவதாகவும், தொழிலாளர்கள் முகாம்களில் சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பை டெல்லி கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் உள்ள கட்டுமான தளங்களில் இருந்து பணம் மற்றும் தங்குமிடம் குறித்த கவலைகள் தொடர்ந்து இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தனிமைபடுத்தும் மையமாக மாற்றப்படும் பயிற்சிக்கூடம்
மேலும் இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் கொரோனாவின் தாக்கம் மத்தியில், உடனடி நிதி மூலமாகவும், இது தவிர எங்களது பயிற்சி மையங்களை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றும் எல் & டி தெரிவித்துள்ளது. இதையடுத்து பிஎம் கேர்ஸூக்கு இந்த கொடிய தொற்றினை எதிர்த்து போராடுவதற்காக 150 கோடி ரூபாய் நிதியினை அளிக்க உள்ளதாகவும் எல் & டி தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் வங்கி கணக்கில் ஊதியம்
இது தவிர இந்த நிறுவனம் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கான ஊதியத்தினை அவர்களின் வங்கிக் கணக்கிலும் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. ஒப்பந்த ஊழியர்கள் வேலைக்கு வராத நிலையில் கூட அவர்களுக்கு உதவும் வகையில் சம்பளத்தினை வங்கி கணக்கில் அனுப்ப உள்ளதாக கூறுவது, ஊழியர்களுக்கு இந்த சமயத்தில் மிக உபயோகமுள்ளதாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications