மும்பை: இந்தியா கொரோனாவுக்கு எதிரான பெரிய யுத்தத்தினை மேற்கொண்டு வரும் நிலையில், நன்கொடை வழங்க அனைத்து தரப்பு மக்களும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது நிச்சயம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கு இது வழிவகுக்கும். அதாவது கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையிலும் இது உதவும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிதியினை PM CARES என்கிற பெயரில் நிதி பெறுவதற்கான வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. ஆக மக்கள் pmindia.gov.in எனும் இணையதளத்திற்கு சென்று பொதுமக்கள் நிதி வழங்கலாம் என்றும் பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதையடுத்து பலரும் நிதியினை வாரி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம்
இந்த நிலையில் நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான larsan & Turbo (L&T) நிறுவனம், தனது 1,60,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக மாதத்திற்கு 500 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளது. இது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் இருக்கும் ஒப்பந்த ஊழியர்கள், மற்றும் தங்களது முகாம்களில் தங்கியிருக்கும் ஊழியர்களுக்கும் போதுமான அடிப்படை வசதிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பராமரிப்பு நடவடிக்கை
மேலும் நிறுவனம் சுகாதாரம் மற்றும் கழிவு சுகாதாரத்தினை பராமரித்து வருவதாகவும், தொழிலாளர்கள் முகாம்களில் சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பை டெல்லி கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் உள்ள கட்டுமான தளங்களில் இருந்து பணம் மற்றும் தங்குமிடம் குறித்த கவலைகள் தொடர்ந்து இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தனிமைபடுத்தும் மையமாக மாற்றப்படும் பயிற்சிக்கூடம்
மேலும் இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் கொரோனாவின் தாக்கம் மத்தியில், உடனடி நிதி மூலமாகவும், இது தவிர எங்களது பயிற்சி மையங்களை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றும் எல் & டி தெரிவித்துள்ளது. இதையடுத்து பிஎம் கேர்ஸூக்கு இந்த கொடிய தொற்றினை எதிர்த்து போராடுவதற்காக 150 கோடி ரூபாய் நிதியினை அளிக்க உள்ளதாகவும் எல் & டி தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் வங்கி கணக்கில் ஊதியம்
இது தவிர இந்த நிறுவனம் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கான ஊதியத்தினை அவர்களின் வங்கிக் கணக்கிலும் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. ஒப்பந்த ஊழியர்கள் வேலைக்கு வராத நிலையில் கூட அவர்களுக்கு உதவும் வகையில் சம்பளத்தினை வங்கி கணக்கில் அனுப்ப உள்ளதாக கூறுவது, ஊழியர்களுக்கு இந்த சமயத்தில் மிக உபயோகமுள்ளதாக இருக்கும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications