சென்னை: எல்&டி நிறுவனம் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் மிகப்பெரிய டேட்டா மையத்தை நிறுவி வருகிறது. தற்போது உலகளவில் டேட்டா மையங்களுக்கான தேவை அதிகரித்து விட்டது. கிளவுட் கட்டமைப்புகள், ஏஐ செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு டேட்டா மையங்களின் தேவை அவசியமாகிவிட்டது.
கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி டெக் நிறுவனங்கள் டேட்டா மையங்களை நிறுவுவதில் ஆர்வம் காட்டுகின்றன. இந்தியாவில் உள்கட்டமைப்பு, பொறியியல் , பராமரிப்பு, ஐடி ஆகிய பல துறைகளில் செயல்பட்டு வரக்கூடிய எல்&டி நிறுவனம் டேட்டா மையங்களை அமைக்கும் பணிகளையும் கையில் எடுத்துள்ளது. தற்போது ஸ்ரீபெரும்புதூரில் அமைய இருக்கும் இந்த டேட்டா மையம் விரைவில் செயல்பட தயாராக இருக்கிறது என எல்&டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எல்&டி நிறுவன மூத்த அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில் இந்த டேட்டா மையத்திற்கான சோதனை பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது எனக் கூறியுள்ளனர். கூடிய விரைவில் அதானி, ஏர்டெல் மற்றும் எஸ்டிடி குளோபல் போன்ற நிறுவனங்களைப் போல சென்னைக்கு அருகே டேட்டா மையம் கொண்ட நிறுவனம் என்ற பெருமை எல்&டிக்கு கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.
எல்&டி நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு நிதி முடிவுகளை வெளியிடும் நிகழ்ச்சியில் பேசிய முதலீட்டாளர்களுக்கான தகவல் தொடர்பு அதிகாரி ராமகிருஷ்ணன் ,சென்னை அருகே 12 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா மையம் அமைக்கும் பணி நிறைவடைய இருப்பதாக கூறினார்.
கூடிய விரைவில் இது 30 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா மையமாக மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எல்&டி நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசும் அரசுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு கட்டமாக 90 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாக 600 பேருக்கும் மறைமுகமாக 500 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எல்&டி நிறுவனம் தெரிவித்தது.
இதன் முதல் கட்டமாக தான் தற்போது 12 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா மையம் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த டேட்டா மையத்திற்கு தடையில்லா மின்சார வசதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி நவிமும்பை ,பெங்களூரு ஆகிய பகுதிகளிலும் தங்களுடைய நிறுவனம் டேட்டா மையத்தை நிறுவி வருவதாக ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications