அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களால் தொழிலாளர்கள் வேறு மாநிலத்திற்கு சென்று பணிபுரிய விரும்புவதில்லை என எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ். என். சுப்பிரமணியன் கூறி இருப்பது பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
எல்&டி நிறுவனத்தின் தலைவரும் மேலாண் இயக்குனருமான எஸ். என்.சுப்பிரமணியன் தன்னுடைய பேச்சின் மூலம் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். கடந்த மாதம் இவர் எல்&டி நிறுவன ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை செய்ய வேண்டும் என கூறியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் மீண்டும் எடக்கு முடக்காக பேசி இருக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற சிஐஐ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ். என். சுப்பிரமணியன் தற்போது கட்டட தொழிலாளர்கள் வேலைக்கு கிடைப்பதில் பல்வேறு சவால்கள் இருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது கட்டட பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது, ஆனால் தேவைக்கேற்ப தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என கூறியுள்ளார்.
முன்பை போல தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று பணிபுரிய விரும்புவதில்லை என தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்புக்காக தொழிலாளர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர மறுக்கின்றனர் என கூறியுள்ள அவர் இதற்கு மாநில அரசுகளும் காரணம் என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் அதை விடுத்து வேறு மாநிலங்களுக்கு செல்ல மக்கள் விரும்புவதில்லை என கூறி இருக்கும் அவர், அரசு நல திட்டங்களும் இதற்கு ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரசு நல திட்டங்கள் மூலம் மக்களின் வங்கி கணக்கிற்கே பணம் செல்வதை குறிப்பிட்டுள்ள அவர் , இதனாலேயே தொழிலாளர்கள் தங்கள் இடத்தை விட்டு வெளியேற மறுக்கின்றனர் என்கிறார்.
இது போன்ற திட்டங்கள் அவர்களை சௌகரியமான மனநிலையில் வைத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழியர்கள் வேலை ராஜினாமா செய்வதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை, ஆனால் தொழிலாளர்கள் கிடைப்பது தான் சவாலாக இருக்கிறது என கூறியுள்ளார்.
எல்&டி (Larsen & Toubro (L&T)) என்பது இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமம் ஆகும். பொறியியல், கட்டுமானம், உற்பத்தி, தொழில்நுட்பம், நிதி சேவைகள் என பல துறைகளிலும் இயங்கி வருகிறது.
இந்தியாவில் பல்வேறு சாலைகள், விமான நிலையங்கள், பாலங்கள், மின்சார உற்பத்தி நிலையங்களை இந்நிறுவனம் கட்டமைத்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாலேயே இந்நிறுவனத்தின் தலைவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமாக கவனிக்கப்படுகின்றன.
முன்னதாக சுப்பிரமணியன், ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பணி புரிய வேண்டும் என கூறி சர்ச்சையில் சிக்கினார். எவ்வளவு நேரம் தான் உங்கள் மனைவியின் முகத்தை பார்த்து கொண்டிருக்க முடியும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது என அவர் கூறினார்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications