டெல்லி : ஒரே நாடு ஒரே ஊதியம் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தொழிலாளர் நலன்களுக்காக தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் இப்படி ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்த போவதாக திட்டமிட்டிருப்பதாகவும், இது விரைவில் அமல்படுத்தப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் முறைப்படுத்தப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே சம்பள தினம் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சந்தோஷ் கங்வார், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பணியில் பாதுகாப்பு, உடல்நலம், ஊதியம் ஆகியவற்றில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட கடுமையான சட்ட திட்டங்களை மத்திய அரசு விதித்துள்ளது. மேலும் தொழிலாலர் நல சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில் 2014 முதல் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரே நாடு, ஒரே ஊதியம் எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 23, 2019 அன்று OSH கோடு அறிமுகப்படுத்தப்பட்டது. இது பாதுக்காப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான 13 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒரே குறியீடாக இணைப்பதன் மூலம் தொழிலாளர்கள் அதிகரித்தாலும், தனியார் துறையை நெறிப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
அரசு புதிதாக அறிமுகப்படுத்திய OSH கோடு பல புதிய முயற்சிகளைக் கொண்டுள்ளது. கடந்த 2014ல் மோடி அரசு முதல் முறையாக பதவியேற்றதிலிருந்து, தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்துவதில் தொடர்ந்து பணியாற்றி வருவாதாகவும் கங்வார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் 44 சிக்கலான தொழிலாளர் சட்டங்களை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். இந்தச் சட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக மாற்ற அனைத்து தரப்பினருடன் நாங்கள் கலந்து ஆலோசித்து பேசி வருகிறோம் என்றும் கங்வார் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications