டெல்லி : ஒரே நாடு ஒரே ஊதியம் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தொழிலாளர் நலன்களுக்காக தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் இப்படி ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்த போவதாக திட்டமிட்டிருப்பதாகவும், இது விரைவில் அமல்படுத்தப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் முறைப்படுத்தப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே சம்பள தினம் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சந்தோஷ் கங்வார், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பணியில் பாதுகாப்பு, உடல்நலம், ஊதியம் ஆகியவற்றில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட கடுமையான சட்ட திட்டங்களை மத்திய அரசு விதித்துள்ளது. மேலும் தொழிலாலர் நல சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில் 2014 முதல் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரே நாடு, ஒரே ஊதியம் எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 23, 2019 அன்று OSH கோடு அறிமுகப்படுத்தப்பட்டது. இது பாதுக்காப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான 13 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒரே குறியீடாக இணைப்பதன் மூலம் தொழிலாளர்கள் அதிகரித்தாலும், தனியார் துறையை நெறிப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
அரசு புதிதாக அறிமுகப்படுத்திய OSH கோடு பல புதிய முயற்சிகளைக் கொண்டுள்ளது. கடந்த 2014ல் மோடி அரசு முதல் முறையாக பதவியேற்றதிலிருந்து, தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்துவதில் தொடர்ந்து பணியாற்றி வருவாதாகவும் கங்வார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் 44 சிக்கலான தொழிலாளர் சட்டங்களை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். இந்தச் சட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக மாற்ற அனைத்து தரப்பினருடன் நாங்கள் கலந்து ஆலோசித்து பேசி வருகிறோம் என்றும் கங்வார் தெரிவித்துள்ளார்.