2024-ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்கள் தான் தொடரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது இந்தக் காலாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தற்போதுள்ள வட்டி விகிதங்கள் மாறாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காலாண்டுக்கு ஒருமுறை அரசு மாற்றியமைக்கும்.
ஆனால் இந்த காலாண்டிலும், போன காலண்டிலும் வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது. இது வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்த்த முதலீடாளர்களுக்கு சற்று கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.

அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் (POTD), மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ், மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) ஆகியவை அடங்கும்.
2024 முதல் 2025-ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31, 2024 அன்று முடிவடையும் வரை 2-வது காலாண்டில் அறிவிக்கப்பட்டவற்றில் இருந்து மாறாமல் இருக்கும் என்று நிதி அமைச்சகம் செப்டம்பர் 30, 2024 அன்று தேதியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் 2024 வரையிலான காலாண்டிற்கான அஞ்சல் அலுவலகத் திட்டங்களின் வட்டி விகிதங்கள்:
சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம்: 4%
1 வருட டேர்ம் டெபாசிட்: 6.9%
2 வருட டேர்ம் டெபாசிட்: 7%
3 வருட டேர்ம் டெபாசிட்: 7.1%
5 வருட டேர்ம் டெபாசிட்: 7.5%
5 வருட ரெக்கரிங் டெபாசிட்: 6.7%
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: 8.2%
மாதாந்திர வருமானத் திட்டம்: 7.4%
தேசிய சேமிப்புச் சான்றிதழ்: 7.7%
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்: 7.1%
கிசான் விகாஸ் பத்ரா: 7.5%
சுகன்யா சம்ரித்தி யோஜனா: 8.2%
சிறுசேமிப்பு திட்டங்கள் முதலீடு செய்ய ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த திட்டங்கள் மத்திய அரசின் ஆதரவுடன் வழங்கப்படுகின்றன. அதில் NSC, SCSS, PPF போன்ற சில திட்டங்கள் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி சேமிப்புகளை வழங்குகிறது. ஒவ்வொரு காலண்டிலும் சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் தொடர்ந்து மதிப்பிடுகிறது.
டிசம்பர் 31, 2023 அன்று முடிவடைந்த காலாண்டில் சில தபால் அலுவலகத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது. ஏப்ரல்-ஜூன் 2020 காலாண்டில் இருந்து பொது வருங்கால வைப்பு நிதிக்கான (பிபிஎஃப்) வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நிலையானதாக உள்ளது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications