இன்றைய காலத்தில் பல இளைஞர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை காட்டிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்து ஒருவர் சம்பாதிக்கும் பணத்தை காட்டிலும், குறுகிய காலத்தில் ஒரு தொழில்முனைவோர் அதிக பணத்தை சம்பாதிப்பதை நாம் பார்த்து வருகிறோம்.
அதேபோல் படித்த துறையில் அதே துறையில் வேலை பார்த்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதில்லை. நமக்கு விருப்பமான தொழிலிலும் ஈடுபட்டாலும் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் இதற்கு நல்ல உதாரணமாக குர்லீன் சாவ்லாவை நாம் சொல்லலாம்.

குர்லீன் சாவ்லா படித்தது என்னவோ சட்டம் ஆனால் சம்பாதிப்பது விவசாயத்தில். ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் மாதந்தோறும் சுமார் ரூ.9 லட்சம் சம்பாதிக்கிறார். குர்லீன் சாவ்லாவின் தனித்துவமான வாழ்க்கையின் சில பக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள். உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் குர்லீன் சாவ்லா.
இவர் புனேயில் உள்ள இந்திய சட்ட சங்கத்தின் சட்ட கல்லூரியில் பட்டம் பெற்றார். சட்டம் பயின்றுள்ள போதிலும் வக்கீல் ஆக பணியாற்ற அவர் ஆர்வம் காட்டவில்லை. ஏதாவது பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.
இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவர் ஜான்சிக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பெட்டி படுக்கையுடன் சொந்த ஊருக்கு திரும்பினார். வீட்டில் அவரால் சும்மா உட்கார்ந்து இருக்க முடியவில்லை. அப்போது ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்தால் என்ன யோசித்தார்.
இதனையடுத்து ஆன்லைன் தளங்களில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்வது குறித்து அறிந்து கொண்டார். முதலில் சோதனை முயற்சியாக தனது வீட்டில் ஸ்ட்ராபெர்ரி பயிரிட ஆரம்பித்தார். சோதனை முயற்சி பெரிய வெற்றியை கொடுத்தது.
இதனையடுத்து தனது தந்தையின் விவசாய தோட்டத்தில் சுமார் 1.5 ஏக்கர் வறண்ட நிலத்தில் ஸ்ட்ராபெர்ரி செடிகளை வளர்க்க தொடங்கினார். இதற்கு அவரது தந்தையும் துணையாக நின்றார். தற்போது ஸ்ட்ராபெர்ரி சாகுபடி மூலம் நல்ல வருமானம் ஈட்டுகிறார்.
குர்லீன் சாவ்லா தினமும் 70 கிலோ ஸ்ட்ராபெர்ரி விற்பனை செய்கிறார். இதன் வாயிலாக அவர் தினந்தோறும் சுமார் ரூ.30,000 சம்பாதிக்கிறார். ஜான்சி ஆர்கானிக்ஸ் என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த இணையதளம் வாயிலாக மக்கள் அவரிடம் இருந்து ஸ்ட்ரபெர்ரி பழங்களை ஆன்லைனில் வாங்கலாம். பிரதமர் நரேந்திர மோடியே தனது மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சியில் குர்லீன் சாவ்லை அவரது முயற்சிக்காக பாராட்டி பேசியுள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications