TCS-இல் அதிரடி மாற்றம்.. புதிய CHRO-ஆக சுதீப் குன்னும்மல் நியமனம்.. யார் இவர்..?

இந்தியாவின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS), உலகளவில் அறியப்பட்ட ஒரு தொழில்நுட்ப சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். சந்தை மதிப்பின் அடிப்படையில் உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் டிசிஎஸ், உலகெங்கிலும் உள்ள பெருநிறுவனங்களுக்கு தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தான், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS), அதன் தலைமை மனிதவள அதிகாரி (CHRO) பதவியில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் தலைமை HR ஆக பணியாற்றி வந்த மிலிந்த் லக்கட், ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிலிந்த் லக்கட் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, சுதீப் குன்னும்மல் இன்று (அக்.1) முதல் நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளதாக டிசிஎஸ் அறிவித்துள்ளது. மார்ச் 14ஆம் தேதி முதலே குன்னும்மல் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்று டிசிஎஸ் முன்பே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TCS-இல் அதிரடி மாற்றம்.. புதிய CHRO-ஆக சுதீப் குன்னும்மல் நியமனம்.. யார் இவர்..?

யார் இந்த சுதீப் குன்னும்மல்..?: கடந்த 2000ஆம் ஆண்டு முதல் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுதீப் குன்னும்மல், தற்போது நிறுவனத்தின் வருவாயில் சுமார் 35 முதல் 40% பங்களிக்கும் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு பிரிவின் மனிதவளப் பிரிவுக்குத் தலைமை தாங்கி வருகிறார்.

நிறுவனத்துடனான தனது 25 ஆண்டுகாலப் பயணத்தில், குன்னும்மல் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய-பசிபிக் போன்ற பகுதிகளில் பல்வேறு மனிதவள தலைமைப் பதவிகளில் பணியாற்றியுள்ளார். இந்த பணி அனுபவம், மேற்கண்ட சந்தைகளில் மனிதவள ஊழியர்களின் முழு வாழ்க்கைப் பயணத்திலும் பங்களிக்கவும், அனுபவம் பெறவும் அவருக்கு உதவியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கியப் பங்களிப்புகள் : நிறுவனத்தின் பரிமாற்றங்களைப் பல ஆண்டுகளாக முன்னெடுத்துச் சென்ற குன்னும்மல், பணியாளர்களை ஒருங்கிணைத்தல், பணியமர்த்தல், இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் போன்ற நேரங்களில் தொய்வில்லாத மாற்றங்களை உறுதி செய்வதன் மூலம் நிறுவனத்தின் அணுகுமுறையை வலுப்படுத்தியுள்ளார்.

டிசிஎஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "திறன் மேலாண்மை மற்றும் தலைமைப் பண்பு மேம்பாட்டுத் துறைகளில், உயர் ஆற்றல் கொண்ட திறமையாளர்களை அடையாளம் காணவும், வளர்க்கவும், தக்கவைத்துக் கொள்ளவும் குன்னும்மல் வணிகத் தலைவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, BFSI பிரிவில் மாறும் திறன் சந்தை தீர்வுகளைச் செயல்படுத்தியுள்ளார்.

இது வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவும், சுறுசுறுப்பை மேம்படுத்தவும், பணியாளர்களிடையே மறைந்திருக்கும் திறனை வெளிக்கொணரவும் உதவுகிறது" என்று டிசிஎஸ் தெரிவித்துள்ளது. மேலும், சுதீப் குன்னும்மல் உலகளாவிய புரோகிராமிங் போட்டியான 'கோட்விடா' மூலம் கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த கோட்விடா முயற்சி, வளாகத் தேர்வின் நடைமுறைகளையே மாற்றியமைத்தது. மேலும், இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மனிதவள மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+