இந்தியாவில் எல்ஜி நிறுவனம் முன்னணி மின்னணு சாதன விற்பனை நிறுவனமாக இருக்கிறது. தென்கொரியாவை சேர்ந்த இந்நிறுவனம் இந்தியாவில் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இயங்கி வருகிறது. மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமாக இருக்கும் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ளது . இதன் மூலம் 1.5 பில்லியன் டாலர்கள் நிதி திரட்டுவது என எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ப்ளூம்பெர்க் நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் எல்ஜி நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐபிஓ வெளியீடு செய்து அதில் கிடைக்கும் தொகையின் மூலம் நிறுவனத்தை பெரிது படுத்துவதற்கு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கிறது.

ஐபிஓ வெளியீடு செய்வதற்காக எல்ஜி நிறுவனம் அமெரிக்கன் கார்ப்பரேஷன், சிட்டி குரூப், ஜே பி மார்கன் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு இந்த ஐபிஓ வெளியீடு நடைபெறும் என சொல்லப்படுகிறது . இந்த ஐபிஓ மூலம் எல்ஜி நிறுவனம் 1.5 பில்லியன் டாலர்கள் திரட்டுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எல் ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மதிப்பு 13 பில்லியன் டாலர்களாக உயரும் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே எல்ஜி நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்வது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் தான் தற்போது வங்கிகளுடன் இந்த நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது தெரிய வந்திருக்கிறது. அடுத்த மாதத்திற்குள் இந்த நிறுவனம் தங்களுடைய ஐபிஓ ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
செபி இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு எல்ஜி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடப்பட உள்ளது . எல்ஜி நிறுவனம் இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள் தங்களுடைய வருமானத்தை 75 பில்லியன் டாலர்கள் வரை உயர்த்த வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எல்ஜி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதி தான் ஐபிஓ வெளியீடு செய்வது என தெரியவந்துள்ளது. இந்திய சந்தை பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. கூடிய விரைவில் ஹூண்டாய் நிறுவனமும் தங்கள் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீடு செய்து இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முடிவு செய்துள்ளது.
Written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications