இந்திய ஐடி துறையில் ஏஐ அச்சம் பரவியுள்ள நிலையில், பல முதலீட்டாளர்கள் டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், கோஃபோர்ஜ் போன்ற ஐடி பங்குகளை விற்று வருகின்றனர். இதனால், இந்த பங்குகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது, சில ஐடி நிறுவன பங்குகள் 30% வரை சரிந்துள்ளது.
ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு முதலீட்டாளரும், இன்சூரன்ஸ் நிறுவனமுமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) சந்தையின் போக்கிற்கு மாற்றமாக செயல்படுகிறது. மற்ற முதலீட்டாளர்கள் ஐடி பங்குகளை விற்கும் போது எல்ஐசி பெருமளவில் வாங்கி வருகிறது.

செல்லகுட்டியாக மாறிய டிசிஎஸ்:
டிசம்பர் காலாண்டில் (கடந்த மூன்று மாதங்கள்) எல்ஐசி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) பங்குகளை ரூ.3,136 கோடி மதிப்பில் வாங்கியுள்ளது. அதேபோல், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் பங்குகளை ரூ.2,293 கோடி அளவில் வாங்கியுள்ளது. மேலும் கோஃபோர்ஜ் நிறுவனத்தின் பங்குகளையும் புதிதாக சேர்த்துள்ளது.
இதனால், எல்ஐசியின் ஐடி துறை முதலீடு ரூ.1.82 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.17 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஐடி துறையின் போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்கு இருப்பில் 11.32%லிருந்து 12.43%க்கு அதிகரித்துள்ளது. எல்ஐசியின் மொத்த போர்ட்ஃபோலியோ ரூ.17.83 லட்சம் கோடி மதிப்புடையது.
ஏஐ அச்சத்தில் விலை சரிவு
ஏஐ தொழில்நுட்பம் ஐடி நிறுவனங்களின் அவுட்சோர்சிங் மாடலை பாதிக்கும் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் இத்துறை பங்குகளை விற்று வருகின்றனர். இதனால் ஐடி பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. ஆனால் எல்ஐசி இந்த விலை இறக்கத்தை வாய்ப்பாக கருதுகிறது. பங்குகள் அதிகமாக விலை குறைந்துள்ளதால், இப்போது வாங்கினால் நீண்டகாலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்று நம்புகிறது. ஏஐ அச்சம் அதிகமாக இருக்கலாம், ஆனால் இந்திய ஐடி துறையின் எதிர்காலம் வலுவானது என்று எல்ஐசி நம்பிக்கை கொண்டுள்ளதையே இத்தகைய பெரும் முதலீடு காட்டுகிறது.
எல்ஐசி கை கழுவிய பங்குகள்
ஐடி பங்குகளை வாங்கும் அதேநேரத்தில், எல்ஐசி வங்கி மற்றும் தொழில்துறை பங்குகளை அதிகளவில் விற்றுள்ளது.
- ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) பங்குகளை ரூ.3,080 கோடி விற்றது. எச்டிஎஃப்சி வங்கி ரூ.1,528 கோடி, பாங்க் ஆஃப் பரோடா ரூ.1,173 கோடி விற்றுள்ளது.
- டிசம்பர் காலாண்டில் லார்சன் அண்ட் டூப்ரோ (எல்அண்ட்டி) ரூ.2,442 கோடி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.2,367 கோடி விற்றுள்ளது எல்ஐசி.
- உலோகத் துறையில் ஹிந்தால்கோ ரூ.2,307 கோடி, வேதாந்தா ரூ.1,491 கோடி விற்றது. இதனால், எல்ஐசி நிறுவனத்தின் நிதி சேவை துறையின் பங்கு போர்ட்ஃபோலியோ பங்கு 27.21%லிருந்து 26.52%க்கு குறைந்துள்ளது, ஆனால் மதிப்பு ரூ.4.64 லட்சம் கோடியாக உள்ளது.
எல்ஐசியின் உத்தி ஏன் முக்கியம்?
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு முதலீட்டாளரான எல்ஐசி, சந்தையில் தனது நிதி ஆதாரத்தை வைத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் முடிவுகளை சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக பார்க்கின்றனர். எல்ஐசியின் இந்த புதிய ஐடி துறை முதலீட்டுக்கு பின்னால் இருக்கும் கணிப்பு சரியானதாக இருந்தால், நீண்டகாலத்தில் பெரிய லாபம் கிடைக்கும்.
ஆனால் ஏஐ உண்மையில் ஐடி துறையை பெரிதாக பாதித்தால், இது ஆபத்தான உத்தியாக இருக்கலாம். தற்போது எல்ஐசி ஐடி துறையின் விலை இறக்கத்தை வாய்ப்பாக பார்க்கிறது என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

அந்தர் பல்டி அடித்த அதானி டோட்டல் கேஸ் பங்குகள்.. முதலீட்டாளர்கள் ஷாக்..!!

கதறி கதறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போரின் கோரமுகம் இந்தியாவில் எதிரொலி..!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

போருக்கு நடுவில் குத்தாட்டம்! சென்செக்ஸ் 2350 புள்ளிகள் உயர உண்மை காரணம் என்ன? பங்குகளில் முதலீடு செய்யலாமா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!



Click it and Unblock the Notifications