தனியார்மயமாகும் ஐடிபிஐ வங்கி.. 60.72% பங்குகளை விற்பனை செய்ய LIC, மத்திய அரசு திட்டம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்ஐசி-யும், மத்திய அரசும் ஐடிபிஐ வங்கியும் தங்களின் 60.72% பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன.

கடந்த ஜுன் 30, நிலவரப்படி, ஐடிபிஐ வங்கியில் இருவரும் 94.70% பங்கினை வைத்திருந்தனர். இதில் மத்திய அரசு 45.48% பங்கினை வைத்துள்ளது. இதே எல்ஐசி-யின் வசம் 49.24% பங்கும் உள்ளது.

தகவல்கள் படி, மத்திய அரசின் வசம் உள்ள 30.48% பங்கும், எல்ஐசி வசம் உள்ள 30.24% பங்கும் விற்பனை செய்யப்படலாம் என தெரிகின்றது.

அமெரிக்காவுக்கு செக்.. சவுதி அரேபியா செய்த காரியத்தை பாத்தீங்களா..?அமெரிக்காவுக்கு செக்.. சவுதி அரேபியா செய்த காரியத்தை பாத்தீங்களா..?

பொதுத்துறை டூ தனியார்மயம்

பொதுத்துறை டூ தனியார்மயம்

இந்தியாவில் பொதுத்துறை வங்கியினை தனியார் மயமாக்குவது இதுவே முதல் முறையாகும். தீபம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஐடிஐபி வங்கி பங்கினை வாங்க முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஐடிஐபி வங்கி பங்கினை வாங்க EOI-யினை தெரிவிக்க டிசம்பர் 16 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த EOI-கள் 180 நாட்களுக்கு செல்லும். இது மற்றொரு 180 நாட்களுக்கு நீட்டிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

தொழிற்துறை வங்கி

தொழிற்துறை வங்கி

ஐடிபிஐ வங்கி மத்திய அரசால் கடந்த 1964ல் உருவாக்கப்பட்டது. இந்த வங்கி மூலம் தொழிற்துறைக்கு தேவையான நிதி கிடைக்க வழிவகுக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர் வளர்ச்சி மற்றும் சீரமைப்பு ஆகியவற்றினால் பொதுமக்களினால், பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில், 2005ல் வங்கியின் செயல்பாடுகள் மாற்றப்பட்டன.

மத்திய அரசின் இலக்கு

மத்திய அரசின் இலக்கு

ஐடிபிஐ வங்கியின் இந்த பங்கு விற்பனை மத்திய அரசின் இலக்கில் முக்கிய பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு பங்கு விற்பனை மூலம் நடப்பு நிதியாண்டினால், 65,000 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இது ஏற்கனவே எல்ஐசி பங்கு விற்பனை மூலம் 24,544 கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் திட்டம்

மத்திய அரசின் திட்டம்

மத்திய அரசு BEML, ஷிப்பிங் கார்ப், விஷாக் ஸ்டீல், ஐடிபிஐ வங்கி, என்எம்டிசி-யின் நகர்னார் ஸ்டீல் ஆலை, HLL லைஃப் கேர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில், இதனை நிதி நெருக்கடியாக அல்லாமல், சீர்திருத்த நடவடிக்கையாக முதலீட்டாளர்களை பார்க்குமாறும் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC, central govt plans to divest 60.72% stake in IDBI bank: check here other details

LIC, Central Government and IDBI Bank have decided to sell their 60.72% stake.
Story first published: Friday, October 7, 2022, 19:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X