எல்ஐசி (LIC) நிருவனத்தில் செப்டம்பர் 2021 வரையில் 21,539 கோடி ரூபாய் தொகையானது கேட்பாரற்று கிடப்பதாக தெரிய வந்துள்ளது.
இது எல்ஐசி நிறுவனம் பங்கு சந்தைக்கு ஐபிஓவுக்கு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில் வெளியாகியுள்ளது.
யாரும் உரிமை கோராத இந்த பெரும் நிதிக்கு வட்டியும் கிடைத்து வருகின்றது என்பது இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம்.
விரைவில் ஒப்புதல்
மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்கினை பொதுப் பங்கு வெளியீடு மூலம், மார்ச் மாத இறுதிக்குள் விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக அறிக்கையும் செபியிடம் தாக்கல் செய்துள்ள நிலையில் விரைவில் ஒப்புதல் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உரிமை கோரப்படாத நிதி
இவ்வாறு உரிமை கோரப்படாத நிதியானது கடந்த 2021ல் 18,495 கோடி ரூபாயாகவும், இதே 2020ல் மார்ச் மாத இறுதியில் 16,052 கோடி ரூபாயாகவும் இருந்தது. இதுவே கடந்த 2019ம் ஆண்டில் 13,843 கோடி ரூபாய் நிதியானது உரிமை கோரப்படாமல் இருந்தது.
யாருடைய பணம் இது?
இவ்வாறு யாரும் கேட்காமல் இருக்கும் இந்த உரிமை கோராப்படாத நிதியானது ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதெல்லாம் சரி இது யாருடைய தொகை? இந்த பணம் எல்லாம் எங்கே போகும். மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம். இது முறையாக பாலிசி எடுத்து, பிறகு பிரீமியம் செலுத்தாமல் இருந்தவர்கள், பாலிசி தொகையை கட்டி முடித்த பிறகு பிரீமியம் செலுத்தாமல் பாலிசி காலாவதியாவது, சிலர் பாலிசி எடுத்ததும் தெரியாமல் பாலிதாரர் விவரங்களை பகிராமல் இருப்பது உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் தான் இந்த தொகையானது கேட்பாறின்றி உள்ளது.
தெரிந்து கொள்ளலாம்
ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனமும் 1,000 ரூபாய்க்கு மேல் உரிமை கோராமல் இருந்தால், அதன் விவரங்களை வெளியிடுவது அவசியான ஒன்றாகும். அதேபோல பாலிசிதாரர்களுக்கும் தங்களின் பாலிசி குறித்தும் கேட்பாறின்றி இருக்கும் தொகை குறித்து கேட்டு தெரிந்து கொள்ளவும் உரிமை உண்டு. இதற்கான வசதியும் இணையத்தில் உண்டு.
என்ன செய்வார்கள்?
அதெல்லாம் சரி இப்படி கேட்பாரற்று கிடக்கும் நிதியினை என்ன செய்வார்கள். ஒரு பாலிசியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணம் கேட்பாறின்றி கிடந்தால், அதனை முதியோர் நலனுக்கான மாற்றப்படலாம். இதற்காக முதியோர் நலன் சட்டம் என்ற பிரிவும் உள்ளது. ஆக இந்த 21,000 கோடி ரூபாய்க்கும் மேலான தொகையானது 10 ஆண்டுகள் கழித்து முதியோர் நலன் நிதிக்கு மாற்றப்படலாம்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications