இன்றைய காலகட்டத்தில் மாட மாளிகையில் இருக்கும் கோடீஸ்வரர் முதல், குடிசையில் வாழும் சாமானிய மக்கள் வரையில் அனைவருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆசையே சொந்த வீடு என்பது தான்.
அவரவர் தகுதிகேற்ப ஒரு சொந்த வீடு கட்டவேண்டும் என்பதே, அவர்களின் வாழ் நாள் கனவுகளில் ஒன்றாக இருக்கும்.
பலருக்கும் இந்த கனவு நனவாக ஒரு வாய்ப்பினை கொடுப்பது வீட்டுக் கடன் திட்டம் தான். இதனை விட சாமனியர்கள் மத்தியில் பெரிய கனவு ஒன்றும் இருக்க முடியாது எனலாம்.
வட்டி விகிதம் குறைவு
அப்படி நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலம் என்றே கூறலாம். ஏனெனில் கனவில் வீடு கட்ட நினைத்தவர்களுக்கும், அதனை நிஜமாக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் என பலவும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை தற்போது குறைவாகவே வைத்துள்ளது.
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் வட்டி விகிதம்
அதிலும் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு வரலாறு காணாத வட்டி குறைப்பினை செய்துள்ளது. இது 50 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு வட்டி விகிதம் 6.66% ஆக குறைத்துள்ளது. எனினும் இந்த சலுகையானது புதியதாக சம்பளம் வாங்கும் தனி நபர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் இருக்கும்
இது வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோருடன் இணைக்கப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது கொரோனாவின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சொந்த வீடு கனவை நிறைவேற்ற மாத சம்பளதாரர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும்.
கால அவகாசம்
மேலும் இந்த வட்டி குறைப்பு விகிதம் மேலும் குறைக்கப்படும். இந்த வட்டி விகிதம் 6.66% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், கடனுக்கான கால அவகாசம் அதிகபட்சம் 30 வருடங்கள் வரையில் கொடுக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இந்த நிறுவனத்தின் ஆஃப் மூலமாக வாடிக்கையாளர்கள் அப்ளை செய்யலாம்.
இது நல்ல வாய்ப்பு தான்
இதற்காக அலுவலகங்களுக்கு சென்று அலையாமலேயே, உங்களது விண்ணப்பத்தின் நிலையினை ஆப் மூலமாக கண்கானிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. உண்மையில் வீடு கட்ட நினைப்பொருக்கு இது நல்ல வாய்ப்பு தான்.
More From GoodReturns

Salary Slip இல்லாமல் லோன் கிடைக்குமா? இந்த ஆவணங்கள் இருந்தால் ஈஸியா லோன் வாங்கலாம்!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications