இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்கும், ஆதிக்கத்திற்கும் முக்கியப் பங்கு விகித்த எல்ஐசி ஏஜெண்ட்கள் தற்போது தொடர்ந்து வெளியேறி வருவதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட காத்து இருக்கும் எல்ஐசி நிறுவனத்திற்கும், எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யக் காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் ராணுவம்
எல்ஐசி நிறுவனத்திற்கு இன்சூரன்ஸ் ஏஜெண்ட் தான் ராணுவம் போல, இந்தியா முழுக்கச் சிறு கிராமம், டவுன் முதல் பெரு நகரங்கள் வரையில் ஏஜெண்ட்களை வைத்துக் கொண்டு இயங்கி வருகிறது.
ல்ஐசி ஏஜெண்ட்கள்
இந்தியாவில் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு மறுப்புத் தெரிவித்த காலத்தில் இருந்து இன்று அனைவரும் தானாக முன்வந்து இன்சூரன்ஸ் பெறும் நிலைக்கு இந்திய மக்கள் மாறியுள்ளதற்கு மிக முக்கியமான காரணம் எல்ஐசி நிறுவனத்தின் ஏஜெண்ட்களின் பல வருட உழைப்பு தான்.
96 சதவீத ப்ரீமியம்
இன்றளவும் எல்ஐசி நிறுவனத்திற்கு 96 சதவீத ப்ரீமியம் தொகையைக் கொண்டு வருவது எல்ஐசி இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள் தான், ஆனால் உண்மையில் பல ஏஜெண்ட்கள் எல்ஐசி நிறுவனத்தில் நேரடி பணியாளர்கள் இல்லை என்பதும் கூடுதல் தகவல்.
கொரோனாவுக்கு பின்
கொரோனா தொற்றுக்குப் பின்பு மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் இன்சூரன்ஸ் துறையில் ஏற்பட்டு உள்ள காரணத்தால் எல்ஐசி இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டுகள் அதிகளவில் வெளியேற துவங்கியுள்ளனர், இதனால் எல்ஐசி நிறுவனத்தின் வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
எல்ஐசி ஏஜெண்ட்கள் வெளியேற்றம்
இந்நிலைில் 2019ஆம் நிதியாண்டில் 2.33 லட்சம் பேரும், 2020ஆம் நிதியாண்டில் 2.43 லட்சம் பேரும், 2021ஆம் நிதியாண்டில்
லட்சம் பேரும், 2022ஆம் நிதியாண்டில் முதல் 6 மாதத்தில் 1.34 லட்சம் எல்ஐசி ஏஜெண்ட்கள் வெளியேறியுள்ளனர் என எல்ஐசி தெரிவித்துள்ளது.
புதிய ஏஜெண்ட்கள் சேர்ப்பு
மேலும் எல்ஐசி நிறுவனத்தின் ஆக்டிவ் ஏஜெண்ட் எண்ணிக்கை மார்ச் 31, 2021ல் 10.86 லட்சமாக இருந்த நிலையில், செப்டம்பர் 30, 2021ல் 17.48 சதவீதம் குறைந்து 8.96 லட்சமாக சரிந்துள்ளது. எல்ஐசி ஏஜெண்ட்கள் வெளியேறுவதற்கு இணையாகப் புதிய ஏஜெண்ட்கள் சேர்க்கப்பட்டாலும் வர்த்தகம் கடந்த சில வருடங்களகாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஆதிக்கம்
ஒட்டுமொத்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 11 லட்சம் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எல்ஐசி இன்று 13.5 லட்சம் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளை வைத்துக்கொண்டு அசத்தி வருகிறது.
ஐபிஓ முதலீட்டாளர்கள்
ஆனால் 96 சதவீத ப்ரீமியம் கொண்டு வரும் எல்ஐசி ஏஜெண்ட்டுகளை தக்கவைப்பதில் நிலையற்ற தன்மை இருக்கும் நிலையில் எல்ஐசி டிஜிட்டல் மார்கெட்டிங் மூலம் வர்த்தகத்தைப் பெற்றாலும் மொத்த வர்த்தகத்தில் 1 சதவீதத்தை கூடத் தாண்டவில்லை. இந்நிலையில் எல்ஐசி நிறுவனத்தில் நீண்ட காலப் பங்கு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியக் காரணியாக இது மாறியுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications