இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, மே 4-ம் தேதி ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிட்ட நிலையில், மே 12-ம் தேதி பங்குகளை ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தது.
எல்ஐசி பங்குகள் ஐபிஓவில் 2.95 மடங்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. எனவே யாருக்கெலாம் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஆர்வமாக முதலீட்டாளர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். எனவே எல்ஐசி ஐபிஓவில் உங்களுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டதா என்பதை ஆன்லைனில் செக் செய்வது எப்படி என விளக்கமாக பார்க்கலாம்.
மும்பை பங்குச்சந்தை இணையதளம்
மும்பை பங்குச்சந்தையில் இணயதளத்தில் உள்ள https://www.bseindia.com/investors/appli_check.aspx என்ற இணைப்பிற்கு சென்று ஈக்விட்டி என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
எல்ஐசி
பின்னர் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா என்பதை தேர்வு செய்து, உங்களது ஐபிஓ விண்ணப்ப எண் அல்லது பான் எண்ணை உள்ளிட வேண்டும். தொடர்ந்து நான் ரோபாட் இல்லை என்பதை தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
கெவின் டெக்னாலஜிஸ் இணையதளம்
மும்பை பங்குச்சந்தை பதிவாளர் கெவின் டெக்னாலஜிஸ் இணையதளம் மூலமாகவும் ஐபிஓவில் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என பார்க்க முடியும். அதற்கு https://kcas.kfintech.com/ipostatus என்ற இணைப்பிற்கு செல்ல வேண்டும்.
தேவையான விவரங்கள்
மேலே அளித்துள்ள இணைப்பிற்கு சென்று ஐபிஓ விண்ணப்ப எண், கிளைன்ட் ஐடி அல்லது பாண் எண்ணை உள்ளிட்டு பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க முடியும்.
எல்ஐசி ஐபிஓ
இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, 21,008.48 கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் மிகப் பெரிய பொதுப் பங்கு வெளியீட்டை நடத்தியது.
ஆர்வம் காட்டாத அனுபவ முதலீட்டாளர்கள்
மே 4-ம் தேதி தொடங்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ பங்கு வெளியீடு, மே 9-ம் தேதி வரை நடைபெற்றது. முதல் நாள் முதல் ஐபிஓ மூலம் எல்ஐசி பங்குகளை அதன் பாலிசிதாரர்கள் அதிகளவில் வாங்கிக் குவித்தனர். ஆனால் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள், அனுபவம் வாய்ந்த ரீடெயில் முதலீட்டாளர்கள் பெரும் அளவில் கவனம் செலுத்தாமல் இருந்தனர்.
மொத்த பங்குகள் விற்பனை
ஐபிஓ மூலம் மொத்தமாக எல்.ஐ.சியின் 16.2 கோடி பங்குகள் விற்க முடிவு செய்யப்பட்டது. கடைசி நாள் முடிவில் 2.95 மடங்கு அதிகமாக விற்பனையாகி மொத்தமாக 47.83 பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி இருந்தார்கள். அதில் யாருக்கெல்லாம் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது இன்று தெரியவரும்.
எல்ஐசி ஐபிஓ-வின் பிற முக்கிய தேதிகள்
எல்ஐசி ஐபிஓ-வில் பங்குகள் கிடைக்காதவர்களின் பணம் மே 13-ம் தேதி ரீஃபண்ட் செய்யப்படும். மே 16-ம் தேதி டீமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படும். மே 17-ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications