எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு மே 4ம் தேதி தொடங்கவுள்ளது. மே 9ம் தேதி இறுதி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே முக்கிய முதலீட்டாளர்களுக்கு மே 2ம் தேதி தொடங்கவுள்ளது.
இதில் பங்கு வெளியீட்டின் விலை 902 - 949 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐபிஓவின் மதிப்பு 20,557 கோடி ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் எதிர்பார்க்கப்பட்டதை போலவே, பாலிசி ஹோல்டர்களுக்கு ஒரு பங்குக்கு 60 சதவீதம் தள்ளுபடியும், இதே ஊழியர்களுக்கு பங்குக்கு 40% தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது பட்டியல்
பங்கு ஒதுக்கீடானது மே 12 அன்று செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மே 16 அன்று டிமேட்களுக்கு பங்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் 17 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஓ மதிப்பு குறைப்பு
சந்தையில் தற்போது நிலவி வரும் மோசமான நிலைக்கு மத்தியில் தனது ஐபிஓ மதிப்பினை கிட்டதட்ட 60% குறைத்துள்ளது.
இது முன்னதாக நாட்டிலேயே வரலாறு காணாத ஐபிஓவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது பல சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் அரசு இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
எல்ஐசி பங்கு வெளீயீட்டில் 50 சதவீதம் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 15% நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனை நடந்து வரும் நிலையில், பொதுப் பங்கு வெளியீடானது தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டுடிருந்த நிலையில், மே 12ம் தேதிக்குள் எல்ஐசி விற்பனையை தொடங்க வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் பொதுப் பங்கு வெளியீடு மே 4ம் தேதி தொடங்கி மே 9ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு பங்குகள்
இந்த பங்கு வெளியீட்டில் 221.37 மில்லியன் பங்குகள் விற்பனை செய்யபடவுள்ளன. இதன் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு 59.29 மில்லியன் பங்குகளாக இருக்கும். இதே பணியாளர்களுக்கு 1.58 மில்லியன் பங்குகளும், பாலிசி ஹோல்டர்களுக்கு 22.14 மில்லியன் பங்குகளும், QIB முதலீட்டாளர்களுக்கு 98.83 மில்லியன் பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.