வெறும் 45 ரூபாயில் இத்தனை லட்சம் கிடைக்குமா? LIC வழங்கும் அசத்தல் திட்டம்!

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) காப்பீட்டு துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம் ஆகும். இங்கு பல்வேறு பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக பல மக்களும் LIC-இல் முதலீடு செய்கின்றனர். இந்த திட்டங்கள் தனிநபர்களின் கல்வி, திருமணம் மற்றும் ஓய்வூதியம் என முக்கிய மைல்களை எட்ட பெரிதும் உதவுகின்றன. இந்தப் பதிவில் எல்ஐசியின் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றான எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசியை பற்றி தான் பார்க்க உள்ளோம்.

எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி என்றால் என்ன?: எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி என்பது குறைந்த பிரிமியத்துடன் அதிக வருமானத்தை பெற நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டம் ஆகும்.

 வெறும் 45 ரூபாயில் இத்தனை லட்சம் கிடைக்குமா? LIC வழங்கும் அசத்தல் திட்டம்!

எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசியின் கீழ் ஒரு நாளைக்கு 45 ரூபாய் சேமித்தால் 35 ஆண்டுகளில் 25 லட்சம் ரூபாய் கார்பஸை உருவாக்க முடியும். ஒரு நாளைக்கு 45 ரூபாய் என்றால் மாதத்திற்கு 1,358 ரூபாய். அப்படியானால் ஒரு ஆண்டுக்கு 16,300 தேவைப்படும். 35 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் மொத்தமாக 5,70,500 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு கூடுதலாக போனஸ் மற்றும் ரிவர்ஷனரி போனஸ் ஆகியவை கிடைக்கும்.

5 லட்சம் அடிப்படை தொகை பிளஸ் 8,60,000 ரூபாய் போனஸ் ஆகியவற்றுடன் சேர்த்து 11.50 லட்சம் இறுதி போனசாக வழங்கப்படும். நீங்கள் முதலீடு செய்த தொகையை விட வழங்கப்படும் போனஸ் அதிகமாக இருக்கும். ஆனால் போனஸ் பெறுவதற்கு ஒரு கண்டிஷன் இருக்கிறது. அது என்னவென்றால் குறைந்தது 15 ஆண்டுகள் வரை உங்களுடைய பாலிசி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

எல்ஐசி ஜீவன் ஆனந்த் திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?: குறைந்தபட்சமாக தினசரி 45 ரூபாய் சேமிப்பதன் மூலம் பாலிசிதாரர்கள் 35 ஆண்டுகளில் ரூ.25 லட்சத்தை பெற முடியும். இந்த டேர்ம் பாலிசி போனஸ் மற்றும் டெத் பெனிபிட்களை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், விபத்து காப்பீடு மற்றும் ரைடர் போன்ற கூடுதல் அம்சங்களையும் வழங்குகிறது. மேலும், ஜீவன் ஆனந்த் திட்டம் பிரீமியம் கட்டண விருப்பங்களை வழங்குகிறது மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை சரண்டர் செய்ய அனுமதிக்கிறது.

மேலும், பாலிசி விபத்து மரணம் மற்றும் ஊனமுற்ற ரைடர், விபத்து ரைடர், புதிய டேர்ம் இன்சூரன்ஸ் ரைடர் மற்றும் புதிய கிரிட்டிக்கல் பெனிபிட் ரைடர் போன்ற பலன்களை வழங்குகிறது. பாலிசிதாரருக்கு துரதிர்ஷ்டவசமாக மரணம் ஏற்பட்டால், நாமினி 125% இறப்புப் பலன்களைப் பெறலாம்.

எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசியின் முக்கிய அம்சங்கள்: காப்பீட்டுத் தொகை மட்டுமின்றி கூடுதல் போனஸ்களையும் வழங்குகிறது. பாலிசிதாரருக்கு மரணம் ஏற்பட்டால் நாமினிக்கு உறுதியாக தொகை வழங்கப்படுகிறது. காப்பீடு செய்யப்பட்ட நபரின் வாழ்நாள் முழுவதும் நிதி பாதுகாப்பை எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி வழங்குகிறது. குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 50 வயது வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். பாலிசிக்காலம் 15 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை. பாலிசி எடுத்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடன் பெறவும் விண்ணப்பிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+