2008ல் தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆண்டுக்கு ஆண்டு பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிஎஸ்கே, மும்பை உள்பட மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியால் நாட்டின் மிகப்பெரிய இன்ஸ்யூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி பெரிய ஜாக்பாட் வருமானத்தை அடித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் ஐபிஎல் நிர்வாக குழு, கிரிக்கெட் அணிகளின் அனைத்து உரிமையாளர்களிடமும் அணியை தனி நிறுவனங்களாக மாற்றும்படி உத்தரவிட்டது. இதனையடுத்து, சிஎஸ்கேவின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ், 2014ல் தனது உரிமையை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (சிஎஸ்கேசிஎல்) என்ற தனி நிறுவனமாக பிரித்தது. இதைத் தொடர்ந்து, இந்தியா சிமெண்ட்ஸ் பங்குதாரர்கள் சிஎஸ்கேசிஎல் பங்குகளை 1:1 என்ற விகிதத்தில் பெற்றனர்.

அந்த நேரத்தில் எல்ஐசி, இந்தியா சிமெண்ட்ஸின் சுமார் 1.8 கோடி பங்குகளை வைத்திருந்தது, அதாவது 6.04 சதவீத பங்கு மூலதனத்தை வைத்திருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் பிரிந்தது முதல், சிஎஸ்கேவில் எல்ஐசி செய்த முதலீடு குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளது. உதாரணமாக, 2019ல் பட்டியலிடப்படாத சந்தையில் சிஎஸ்கேவின் ஒரு பங்கின் விலை ரூ.31ல் இருந்தது. தற்போது இது ரூ.190-195ஆக உயர்ந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் (6 ஆண்டுகளில்) சிஎஸ்கேவின் பங்கு விலை 529 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022ல் சிஎஸ்கே-வின் பட்டியலிடப்படாத பங்கு விலை வாழ்நாள் உச்சமான ரூ.223ஐ எட்டியது. சிஎஸ்கேவின் தற்போதைய விலையில் பார்த்தால் கூட, சிஎஸ்கேவில் மேற்கொண்ட முதலீட்டுக்கு எல்ஐசிக்கு 5 மடங்கு லாபம் கிடைத்துள்ளது.
ஐபிஎல்லில் சிஎஸ்கே தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதால், எல்ஐசியின் முதலீடு பாரம்பரி சொத்துக்களுக்கு அப்பால் அதன் போர்ட்ஃபோலியாவை பல்வகைப்படுத்துதவதில் ஒரு மூலோபாய நடவடிக்கையாக உள்ளது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்தில் எல்ஐசி 4 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது.
இன்க்ரெட் மணி அறிக்கையின்படி, பொதுவாக ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவின் பங்கு தேவை அதிகரிக்கும். குறிப்பாக அணி சிறப்பாக செயல்படும் போது பங்குக்கான தேவை உயரும். போட்டி உற்சாகமாக நடக்கும் போது பங்கின் விலை அதிகரிக்கும், போட்டிகள் நிறைவடைந்ததும் பங்கின் விலை குறையும். இந்த சீசன் டிரெண்ட் அணியின் வலுவான பிராண்ட் ஈர்ப்பையும் முதலீட்டாளர் உணர்வையும் பிரதிபலிக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் வெளிபார்வைக்கு மிகப்பெரிய விளையாட்டு தொடராக தெரிந்தாலும், அதன் பின்னால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் உள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications