பொதுவாக பங்கு சந்தையில் ஐபிஓ என்றாலே சிறு முதலீட்டாளார்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட மிக நல்ல வாய்ப்பிலும், சில ஐபிஒ-க்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காத்திருக்கும் ஐபிஓ-வில் எல்ஐசி-யும் ஒன்று.
பொதுவாக பங்கு சந்தையில் ஐபிஓ என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட மிக நல்ல வாய்ப்பிலும், சில ஐபிஒ-க்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தும்.
இதுவரை இல்லாத அளவு
இதற்கிடையில் எல்ஐசி ஐபிஒ-வானது இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பங்கு வெளியீடாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மதிப்பு 40,000 கோடி ரூபாய் முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பங்கு சந்தை வரலாற்றிலேயே இது வரலாற்று சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விதிகள் மாற்றம்
இந்த பங்கு வெளியீட்டுக்காக மூலதன சந்தை விதிகள், எஸ் எம் எஸ் விதிகள், செய்தித்தாள் விளம்பரங்கள் என பலவற்றிலும் பல மாற்றங்களை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்த பங்கு வெளியீட்டுக்கு தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்ஜெட் பற்றாகுறை
இது அரசின் பட்ஜெட்டில் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், அதனை அடைய ஏதுவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எல் ஐ சியின் இந்த மெகா ஐபிஓ திட்டங்கள் பிரமிக்க வைக்கிறது என்றாலும், தேவையான சந்தைப்படுத்தல் முயற்சியினையும் நிறுவனம் எடுக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சிறப்பு நிறுவனம்
மேலும் வெளி நாட்டில் இருந்து முதலீட்டாளர்களை கவர்ந்திழுப்பதற்காக, FDI முதலீட்டு விதிகளை எளிதாக்கலாம். பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வெளி நாட்டு முதலீடுகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் எல் ஐ சியில் அனுமதிக்கப்படவில்லை. இது நாடாளுமன்றத்தின் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு நிறுவனம் என்பது நினைவுகூறத்தக்கது.
எப்போது தாக்கல்
எல்ஐசி-யின் ஐபிஓ-வுக்கு ஜனவரி மூன்றாவது வாரத்தில் செபியிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஏற்கனவே பல முறை தகவல்கள் வெளியாகின. எனினும் இன்று வரையில் கொரோனா, அதனை தொடர்ந்து ஓமிக்ரான் என பல காரணிகளினால் தாக்கல் செய்யப்படவில்லை.
எது எப்படியோ விரைவில் முதலீட்டாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு காத்துக் கொண்டுள்ளது எனலாம்.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்பும் பிளிப்கார்ட்! இந்தியாவில் IPO களமிறங்க மெகா திட்டம்!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications