டெல்லி: அதானி குழுமம் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வந்த நிலையில், அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டுள்ளன. இதன் காரணமாக எல்ஐசி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் மீது அரசியல் தரப்பினர், சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில் எல்ஐசி இதனை கருத்தில் கொண்டு எல்ஐசி அதன் கடன் மற்றும் பங்குகள் மீதான வரம்புகளில் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு விமர்சனங்கள்
இது எல்ஐசி நிறுவனம் அதன் முதலீடுகளின் மீது எடுக்கும் ரிஸ்கினை குறைக்கும் விதமாக, இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிகிறது.
அதானி குழுமத்தில் எல்ஐசி-யின் முதலீடானது பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டாலும், தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் பல விமர்சனங்களை பெற்று வருகின்றது.
எல்ஐசி-யின் முதலீட்டு நிலை
தற்போது எல்ஐசி நிறுவனத்தின் முதலீடு என்பது நேர்மறையான பாதைக்கு திரும்பியிருந்தாலும், எல்ஐசி-யின் இந்த யூக கருத்தானது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமானது அதானி குழும நிறுவனங்களின் கடன் மற்றும் ஈக்விட்டிகளில் 36,474.78 கோடி ரூபாய் முதலீட்டினை ஜனவரி 31, 2023 நிலவரப்படி வைத்திருந்தது.
எவ்வளவு முதலீடு?
எல்ஐசி வாங்கிய பங்குகளின் மொத்த மதிப்பு நிலவரம் 30,127 கோடி ரூபாயாகும். தற்போது இது முதலீட்டு நிலையில் இருந்து லாபத்தில் இருந்தாலும், எச்சரிக்கை நடவடிக்கையாக இது அமலுக்கு கொண்டு வரப்படலாம் என தெரிகின்றது. எனினும் எல்ஐசி-யின் இந்த முடிவால் உள்நாட்டு முதலீடுகள் என்பது கணிசமான குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் மற்ற பல நல்ல நிறுவனங்களிலும் முதலீடுகள் குறையலாம்.
உச்ச வரம்பு கொண்டு வரலாம்
எனினும் எல்ஐசி-யின் முதலீட்டு விகிதத்தில் அதானி குழுமத்தில் வெறும் 0.975% மட்டுமே இருந்தது. இது வெறும் 1% கீழாகவே இருந்து வருகின்றது. எனினும் இந்த தகவல்கள் எல்ஐசி தனது முதலீடுகளில் ஒரு உச்ச வரம்பினை கொண்டு வரலாம் என தெரிகிறது. இந்த உச்ச வரம்பானது எல்ஐசி இயக்குனர் குழுவானது ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில், இது எல்ஐசி-யின் முதலீடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது எல்ஐசி-க்கும் லாபத்தில் சரிவினை காண வழிவகுக்கலாம்.
தனியார் நிறுவனங்களில் முதலீடு
தற்போது எல்ஐசி இன்சூரன்ஸ் நிறுவனம் தனிப்பட்ட தனியார் வணிக குழுமங்களில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை செய்துள்ளது. இது அதானி குழுமத்தினை தாண்டி, மற்ற பெரிய நிறுவனங்களில் பெரியளவில் முதலீட்டினை செய்துள்ளது. ஆக இதில் கட்டுப்பாடுகள் உச்ச வரம்புகள் என வரும்போது, தனியார் வணிக குழுமங்கள் முதலீடுகள், போதிய நிதி கிடைக்காமல் பாதிக்கப்படலாம்.
எல்ஐசி என்ன முடிவு எடுக்கப்போகிறது?
சந்தை ஆய்வாளர்கள் சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில், முதலீட்டாளர்களின் நிதிக்கு பிரச்சனை வரலாம் என அஞ்சுகின்றனர். ஆக இத்தகைய முடிவுகள் என்பது நல்ல விஷயமாகவே பார்க்கப்பட்டாலும், எல்ஐசி குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் மட்டுமே முதலீடு செய்யவில்லை. ஆக எல்ஐசி-யின் இந்த முடிவு எந்தளவுக்கு சாத்தியமான ஒன்றாக இருக்கும். இது சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications