இந்தியாவில் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஐபிஓ வெளியீடு மூலம் மத்திய அரசு மிகப்பெரிய தொகையை முதலீடாகப் பெறத் திட்டமிட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் இந்நிறுவன ஐபிஓ-விற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் எல்ஐசி ஐபிஓ வெளியிட அனைத்து பணிகளை வேகமாகச் செய்து வரும் நிலையில் முக்கியமாக ஒரு உயர் பணியிடத்தை உருவாக்கவும், அப்பணியிடத்தில் அதிகாரியை நியமிக்க முடிவு செய்துள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரி
நடப்பு நிதியாண்டின் துவக்கம் முதல் எல்ஐசி நிறுவனம் ஐபிஓ வெளியிடுவதற்கான பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து வருகிறது. இதன் படி எல்ஐசி நிறுவனத்தின் உயர் பதவியை சேர்மன் என்பதை மாற்றித் தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றப்பட்டது.
தலைமை நிதியியல் அதிகாரி
இதைத் தொடர்ந்து தற்போது எல்ஐசி நிர்வாகம் புதிதாகத் தலைமை நிதியியல் அதிகாரி அதாவது chief financial officer பணியிடத்தை உருவாக்கவும், இப்பணியிடத்தில் தகுதியான அதிகாரியை நியமிக்க வேண்டும் எனத் தனது இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1 லட்சம் கோடி ரூபாய் ஐபிஓ
எல்ஐசி நிறுவனம் தற்போது ஐபிஓ வெளியிடுவதற்காக மதிப்பீடு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும் கருதப்படும் நிலையில், மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தின் 5 முதல் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஐபிஓ எப்போது
எல்ஐசி ஐபிஓ எப்போது வரும் என்பதில் உறுதியான முடிவை மத்திய அரசு அறிவிக்காத நிலையில், 2022 நிதியாண்டின் இறுதிக்குள் வரும் என்று ஒரு தரப்பு, இன்னொரு தரப்பு 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்பட்டும் எனக் கூறுகிறது. எது எப்படி இருந்தாலும் எல்ஐசி ஐபிஓ வெளியாவது உறுதி.
10 முதலீட்டு வங்கிகள்
மத்திய அரசு சமீபத்தில் எல்ஐசி ஐபிஓ வெளியிடுவதற்காக இதை நிர்வாகம் செய்யக் கோல்டுமேன் சாச்சீஸ், எஸ்பிஐ கேப்பிடல் மார்கெட், சிட்டி குரூப் என 10 முதலீட்டு வங்கிகளை நியமித்து, நிறுவனத்தின் மதிப்பீட்டை மதிப்பீடு செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பீடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications