நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி பல குடும்பங்களைப் பெரிய இழப்பில் இருந்து காப்பாற்றிய கதை பலருக்கும் தெரியும். ஆனால் தற்போது இந்நிறுவனத்தின் வராக்கடன் பிரச்சனை நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. தொடர்ந்து வங்கிகள் வராக்கடன் பிரச்சனை உடன் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது எல்ஐசி நிறுவனமும் இதில் சிக்கியுள்ளது.
முதலீட்டுக்கு நம்பிக்கையாக இருக்கும் எல்ஐசி நிறுவனத்தில் தற்போது 30000 கோடி ரூபாய் அளவிலான வராக்கடன் வைத்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
மொத்த வராக்கடன்
எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி செப்டம்பர் 30. 2019 வரையிலான காலத்தின் நிலவரப்படி இந்நிறுவனத்தின் மொத்தம் வராக்கடன் சுமார் 30,000 கோடி ரூபாயாக உள்ளது.
இந்நிலையில் தற்போது எல்ஐசி நிறுவனத்தின் மொத்த வாராக்கடன் தனது மொத்த சொத்து மதிப்பில் 6.10% உள்ளதாகவும், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டதட்ட இது இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் எல்ஐசி எப்போதும் நிலையான மொத்த வாராக்கடன் விகிதம் 1.5 - 2% தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
3 நிறுவனங்கள்
இந்த 30,000 கோடி ரூபாய் வராக்கடனில் 11,000 கோடி ரூபாய் வெறும் 3 நிறுவனங்கள் மூலம் ஏற்பட்டு உள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. 2020ஆம் நிதியாண்டின் முதல் 6 மாத வர்த்தகத்தைக் கணக்கிடுகையில் DHFL, ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மற்றும் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டும் சுமார் 11,000 கோடி ரூபாய் வராக்கடனுக்குக் காரணமாக இருக்கிறது.
6,500 கோடி ரூபாய்
எல்ஐசி நிறுவனம், DHFL நிறுவனத்திற்குக் கொடுத்த 6,500 கோடி ரூபாய் முதலீடும், கடனும் ஜூன் மாதத்தில் வரக்கடனாக மாறியது. DHFL நிறுவனத்தில் எல்ஐசி லைப் இன்சூரன்ஸ், பென்ஷன் பண்ட்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்தது.
ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தில் செய்த 4000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடும் கடனும் செப்டம்பர் 2019இல் வராக்கடனாக மாறியது.
வராக்கடன் நிறுவனங்கள்
எல்ஐசி பல நிறுவனத்தில் முதலீடும், கடனும் கொடுத்துள்ள நிலையில் அவை தற்போது வராக்கடனாக மாற்றியுள்ளது. அப்படி 30000 கோடி ரூபாய் வராக்கடனாக மாற்றிய நிறுவனங்களின் பட்டியல் இதோ. ஆர்சிட் பார்மா, ரெயின்போ பேப்பர்ஸ், ஜோதி ஸ்டக்ச்சர்ஸ், மந்தான இண்டஸ்ட்ரீஸ், டெக்கான் குரோனிக்கள், எஸ்ஸார் போர்ட், காமன், ஐ எல் & எஃப் எஸ், பூஷண் பவர், வீடியோகான் இஸ்டஸ்ட்ரீஸ், அலோக் இண்டஸ்ட்ரீஸ், ஆம்ற்றாக் ஆட்டோ, ஏபிஜி ஷிப்யார்ட், யூனிடெக், ஜிவிகே பவர், ஜிடிஎல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதில் அடங்கும்.
எல்ஐசி
எல்ஐசி நிறுவனம் தற்போது 4 லட்சம் கோடி ரூபாயை தொகையைக் கடனாகக் கொடுத்துள்ளது. சொத்து மேலாண்மை பிரிவில் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை நிர்வாகம் செய்யும் மாபெரும் நிறுவனம்.
இதில் தற்போது 30,000 கோடி ரூபாய் தொகை வராக்கடன்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications