முன்னணி காப்பீட்டு நிறுவனமாக விளங்கும் LIC டெக் டெர்ம் பிளான் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிளான் முழுமையான ஆயுள் காப்பீட்டு திட்டத்தை தேடும் தனி நபர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதில் பல தனித்துவமான அம்சங்கள் உள்ளது. இதில் 2025-ஆம் ஆண்டில் பயனர்களுக்கு தேவைப்படுகிற பல நன்மைகள் வழங்கப்படுகிறது.
ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என எதில் வேண்டுமானாலும் நீங்கள் இதை பெறலாம். இதில் நிகழ்வான பிரீமியம் விருப்பங்கள், பெண்கள் மற்றும் புகை பிடிக்காதவர்களுக்கு சிறப்பு சலுகைகள் ஆகியவை வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி அனைத்து பாலிசிதாரர்களுக்கும் விபத்து ஏற்பட்டால் ரைடர் வசதியும் வழங்கப்படுகிறது.

தகுதி: இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் 18 முதல் 65 வயதுடையவராக இருக்க வேண்டும். பாலிசியின் மொத்த காலம் 10 முதல் 40 ஆண்டுகள் வரை இருக்கும். எனவே 80 வயது வரை காப்பீட்டை பெரும் வசதி உள்ளது. மேலும் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.50 லட்சம் மற்றும் பிரீமியம் தொகையை ஆண்டுதோறும் அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்த முடியும்.
இந்தத் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம்?: காப்பீட்டைத் தேடும் சம்பளம் பெறும் நபர்கள், புகைபிடிக்காதவர்கள் மற்றும் குறைந்த பிரீமியம் விருப்பங்களைத் தேடும் பெண்கள், 18-65 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்: இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி அறிக்கைகள், சமீபத்திய புகைப்படம்
வருமானச் சான்று போன்றவை வ தேவைப்படும்.
எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ள இந்த டெக் டேர்ம் பாலிசியில் முதலீடு செய்வதற்கு முன்பு சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
குறைந்த பிரீமியத்தில் அதிக பாதுகாப்பு: டெக் டேர்ம் திட்டம் குறைந்த பிரீமியத்தில் கணிசமான ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. செலவு குறைந்த அதே நேரத்தில் சிறந்த சலுகைகள் வழங்கப்படும் திட்டங்களில் இதுவும் ஒன்று. பாதுகாப்பான பாலிசியை தேடும் பாலிசிதாரர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பெண்கள் மற்றும் புகை பிடிக்காதவர்களுக்கு சிறப்பு பிரீமியம் விகிதங்கள்: எல்ஐசி நியூ டெக் டேர்ம் திட்டம் பெண்கள் மற்றும் புகை பிடிக்காத அனைவருக்கும் சிறப்பு பிரீமியம் விகிதங்களை வழங்குகிறது.
ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை: எல்ஐசி நியூ டெக்-டெர்ம் திட்டம் ஆன்லைன் மூலம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பிரத்யேகமாக கிடைக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் காப்பீடு என்பது வெறும் முதலீடு என்று கருதக்கூடாது. அது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படும் போது இவை பாதுகாப்பாக இருக்கும். உதாரணமாக விபத்துகள், நோய்கள், இயற்கை சீற்றங்கள், துரதிஷ்டவசமான மரணம் போன்ற சம்பவங்கள் தனி நபர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய தருணங்களில் காப்பீட்டு திட்டங்கள் ஒரு பலமான துணையாக நின்று அமைதியான வாழ்க்கையை உறுதி செய்ய உதவும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications