இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் எச்டிஎஃப்சி வங்கி முதலீட்டாளர்கள் டிசம்பர் காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு மோசமான மார்ஜின் அளவை பதிவு செய்த காரணத்தால் அதன் பங்கு மதிப்பு பெரிய அளவில் சரிந்து முதலீட்டாளர்கள் பெரிய அளவிலான இழப்பை எதிர்கொண்ட நிலையில் இன்று வரையில் இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு வர போராடி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் எச்டிஎஃப்சி வங்கி முதலீட்டாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எச்டிஎஃப்சி வங்கியில் சுமார் 9.99% அளவிலான பங்குகளை வாங்குவதற்கு மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) விண்ணப்பித்திருந்த வேளையில் இந்திய ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதல் மூலம் எல்ஐசி நிறுவனம் எச்டிஎஃப்சி வங்கியில் தனது பங்கு இருப்பை 9.9 சதவீதம் வரையில் உயர்த்தி, இவ்வங்கியில் நிர்வாகக் குழுவில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதற்கும் எல்ஐசி தகுதிப் பெற்றுள்ளது. ஆர்பிஐ-யின் விண்ணப்ப ஒப்புதல் மூலம் வாக்கு உரிமை குறித்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது மூலம் மத்திய வங்கியின் ஒப்புதல் வந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, எல்ஐசி அடுத்த ஒரு ஆண்டிற்குள் எச்டிஎப்சி வங்கியின் 9.99% பங்குகளை வாங்க வேண்டும், அதே நேரத்தில் அதன் பங்குகள் 9.99% ஐ தாண்டக்கூடாது. டிசம்பர் 31 நிலவரப்படி எல்ஐசி, எச்டிஎப்சி வங்கியில் 5.19 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் அடுத்த ஒரு வருடத்தில் ரீடைல் சந்தையில் இருந்தோ அல்லது பிற முதலீட்டாளற்களிடம் இருந்தோ கூடுதலாக 4.8 சதவீத பங்குகளை வாங்கும். இதன் வாயிலாக ஹெச்டிஎப்சி பங்கு விலை உயர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இந்தச் செய்தி ஹெச்டிஎப்சி பங்குகளை 52 வார குறைவான அளவுக்குக் குறைந்த மார்ஜின் பிரச்சனைக்குத் தீர்வாக மாறியுள்ளது.

ஜனவரி 25 அன்று, எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் முந்தைய முடிவில் இருந்து 1.41 சதவீதம் குறைந்து, 1435.30 ரூபாயில் முடிவடைந்தது. மேலும் சென்செக்ஸ் குறியீடு ஜனவரி 25 ஆம் தேதி 0.51 சதவீதம் குறைந்து 70,700.67 புள்ளிகளில் முடிந்தது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications