டெல்லி: கூடுதல் வரிப் பிடித்தங்களை தவிர்ப்பதற்கு வரும் 31ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஆதார் மற்றும் பான் கார்டு ஆகிய இரண்டுமே முக்கியமான அடையாள ஆவணங்கள்.
பல்வேறு முறைகேடுகளை தடுப்பதற்காக அனைத்து அரசு சேவைகளுமே ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளன. அந்த வகையில் வருமான வரி செலுத்துவதற்கான முக்கிய ஆவணமான பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதியுடன் பான் – ஆதார் இணைப்புக்கான கெடு முடிவடைந்தது . அதன் பிறகு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கு தாமத கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. மேலும் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலற்றதாகிவிடும் என வருமானவரித்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வருமான வரி செலுத்துவோர் வரும் 31ஆம் தேதிக்குள் தங்களுடைய பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என வருமானவரித்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருமான வரித்துறை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மே 31ஆம் தேதிக்குள் உங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து விடுங்கள். இல்லையெனில் நீங்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டி இருக்கும் என கூறியுள்ளது. இவ்வாறு இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
வருமானவரி தாக்கல் செய்வதற்கு ஜூன் 31ஆம் தேதி கடைசி நாளாக இருக்கும் நிலையில் ,மே 31ஆம் தேதிக்குள் உங்களது பான் எண்ணையும் ஆதாரையும் இணைத்து விடுங்கள் என வருமான வரி துறை சார்பில் பதிவிடப்பட்டுள்ளது.
பான் – ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் அதிக விகிதத்தில் வரி பிடித்தங்களை எதிர்கொள்ள நேரிடும் என வருமான வரித்துறை கூறியுள்ளது கடந்த ஏப்ரல் மாதம் வருமானவரித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் மே 31 ஆம் தேதிக்குள் பான் ஆதார் இணைப்பு முடிவடைந்தால் டிடிஎஸ்-க்கான குறுகிய கழிப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது ஆனால் தவறும் பட்சத்தில் டிடிஎஸ் இருமடங்காக பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உங்களது பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது மிக எளிதானது. இதற்காக https://www.incometax.gov.in/iec/foportal என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கே 'Quick Links’ என்பதை தேர்வு செய்து 'Link Aadhaar’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் PAN, Aadhaar எண் மற்றும் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும். அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என கண்காணித்து 'Link Aadhaar’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை உள்ளீடு செய்து validate button கிளிக் செய்ய வேண்டும். ஆனால் இதற்காக நீங்கள் ரூ.1,000ஐ அபராதமாக செலுத்த வேண்டும்.
Story Written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications