இந்தியாவில் ஐந்தில் நான்கு ஊழியர்கள் இந்த ஆண்டில் புதிய வேலைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் வேலை வாய்ப்பு சந்தை குறித்த ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி ஐந்தில் நான்கு ஊழியர்கள் அதாவது 82 சதவீதம் பேர் 2025 ஆம் ஆண்டு புதிய வேலைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் மனிதவளத்துறை அதிகாரிகளில் 69 சதவீதம் பேர் தங்கள் நிறுவனங்களில் பொருத்தமான தகுதி கொண்ட ஆட்களை தேர்வு செய்வது மிகவும் சவாலாக இருக்கிறது என பதில் அளித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டினை பொறுத்தவரை இந்தியாவில் வேலை வாய்ப்பு சந்தை மிகவும் மந்தமானதாகவே இருந்தது என லிங்குடின் அறிக்கை தெரிவிக்கிறது .இந்த நிலையில் தான் இந்த புதிய ஆண்டிலாவது தங்களுக்கு விருப்பமான வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும் என சுமார் 82 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர்.
58 சதவீதம் பேர் 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை முன்னேறும் என நம்புவதாக கூறியுள்ளனர். மேலும் 49 சதவீதம் பெயர் தாங்கள் அதிக நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பம் செய்வதாகவும் பெருமளவில் தங்களுக்கு பதில்கள் கிடைப்பதில்லை என்றும் கூறுகின்றனர். வேலைவாய்ப்பு தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்களிடம் போதிய திறமை இருப்பதில்லை என மனித வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மனித வளத்துறை பிரிவில் செயல்படக்கூடிய அதிகாரிகள் இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் தற்போது பொருத்தமான திறன் கொண்ட ஊழியர்களை கண்டுபிடிப்பது கடினமானதாக இருக்கிறது என கூறியுள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து ஐந்து மணி நேரங்கள் செலவிட்டு ஒவ்வொருவரின் விண்ணப்பத்தையும் ஆய்வு செய்வதாக கூறியுள்ளனர்.
தற்போது வேலைவாய்ப்பு சந்தை சவால் மிக்கதாக மாறி இருக்கிறது எனக் கூறும் லிங்குடின் தளத்தின் மூத்த மேலாண்மை மேலாளரான நிரஞ்சித்திர பானர்ஜி இந்தியாவில் வேலைவாய்ப்பு தேடுபவர்கள் தாங்கள் தேடும் வேலைக்கு ஏற்றபடி திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறார்.
பார்க்கும் நிறுவனங்களில் எல்லாம் வேலைக்கு விண்ணப்பம் செய்யாமல் நிறுவனத்தைப் பற்றியும் அவர்களின் தேவைகளை பற்றியும் முழுமையாக புரிந்து கொண்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை வாய்ப்பு கிடைக்கிறது என கூறுகிறார்.
இந்தியாவில் வேலை செய்யக்கூடியவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் புதிய துறையில் சென்று புதிய வேலை வாய்ப்பு பெறுவதற்கு தயாராக இருக்கிறோம் என கூறுகின்றனர். 39 சதவீதம் பேர் புதுப்புது திறன்களை கற்றுக்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக கூறுகின்றனர்.
இந்தியாவில் Aircraft Maintenance Engineer, Robotics Technician, Closing Manager ஆகிய மூன்று வேலைகளுக்கு அதிக டிமாண்ட் இருப்பதாக லிங்குடின் அறிக்கை குறிப்பிடுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications