தற்போது உருமாறிய கொரோனாவின் தாக்கம் என்பது சர்வதேச அளவில் பல நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில், பல டெக் நிறுவனங்களும் ஊழியர்களை மீண்டும் வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன.
குறிப்பாக அமெரிக்காவில் தற்போது உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், மீண்டும் கட்டுபாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
பல நிறுவனங்களும் தடுப்பூசி மற்றும் பேஸ் மாஸ்குகளை கட்டாயமாக்கியுள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் இன்னும் சில காலத்திற்கு வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன.
வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கும்
இதற்கிடையில் லிங்க்ட்இன் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருவதாக கூறியுள்ளது. அலுவலகங்கள் படிப்படியாக திறக்கப்படுவதால், ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய ரீமோட் வொர்கிங் மூலம் அனுமதிக்கும் என்று, அதன் தலைமை மக்கள் அதிகாரி டூயிலா ஹான்சன் கூறியுள்ளார்.
நெகிழ்வு தன்மையை வழங்கும்
லிங்க்டுஇன்-னின் இந்த ரீமோட் ஓர்க்கிங் பாலிசியால் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது, அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவது என்ற நெகிழ்வு தன்மையை வழங்கும். இந்த முறையில் பணியாற்ற 16,000 ஊழியர்களுக்கு மேல் விண்ணப்பிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கொரோனாவுக்கு முன்னர் இருந்ததை விட, அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இனியும் அதிகரிக்கலாம்
லிங்க்டுஇன்-னின் இந்த அறிவிப்பினால் ரீமோட் வொர்கிங் மூலம், பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற டெக் நிறுவனங்களான பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்களும், ஊழியர்களை தடுப்பூசி போட்டுக் கொண்டு அலுவலகம் வர கூறி வருகின்றன. ஆனால் லிங்க்ட்இன் தற்போதைக்கு இது போன்ற எந்த அறிவிப்பினையும் கொடுக்கவில்லை.
சம்பளம் மாறலாம்
எனினும் லிங்க்ட்இன் ஊழியர்கள் தங்களது இருப்பிடத்தை மாற்றினால், தங்களது இருப்பிடத்திற்கு ஏற்றவாறு சம்பளம் மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாவின் வருகைக்கு பிறகு அமெரிக்காவில் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்த நிறுவனங்களில் லிங்க்ட்இன்னும் ஒன்று. ஆனால் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்குமா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது.
ஆப்பிள் என்ன கூறியது?
இதே போன்று அக்டோபர் முதல் வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. அதே நேரம், ஆல்பாஃபெட்டின் கூகுள் நிறுவனம் 60% ஊழியர்களை அலுவகத்திற்கு வர வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் லிங்க்ட்இன் நிறுவனம் கொரோனாவின் தாக்கத்திற்கு ஏற்ப, அலுவலகங்களை திறக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications