கொரோனா பாதிப்பின் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்த நாள் முதல் மதுபான கடைகள் மூடப்பட்டது. இதனால் மதுபான விற்பனை முற்றிலும் முடங்கி மாநில அரசுகளின் வருவாய் பெரிய அளவிலான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு லாக்டவுக்குன் பின் எடுக்கப்படும் முக்கியமான வர்த்தக முடிவுகளில் மதுபான விற்பனை முக்கியப் பங்கு வகிக்கிறது.
Recommended Video
மாநில அரசுகள்
மதுபான விற்பனை ஒழிக்க வேண்டும் என ஒரு மக்கள் கூட்டம் போராடி வரும் அதே வேளையில் மாநில அரசுகளின் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கும், அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் கொடுக்கவும் இந்த மதுபான விற்பனை தான் வருமானத்தை ஈட்டி தருகிறது.
இதன் காரணமாகவே மாநில அரசுகள் மதுபான விற்பனையைக் கைவிடாமல் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது.
36 நாட்கள்
இந்தியாவில் கொரோனா தடுப்பிற்காக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு 36 நாட்களில் மாநில அரசுகள் மதுபான விற்பனை தடையினால் மட்டும் சுமார் 24,000 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை இழந்துள்ளது. இது மாநில அரசுக்குக் கடுமையான வருவாய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2019இல் மத்திய அரசு மதுபான விற்பனையில் விதிக்கப்படும் கலால் வரியின் மூலம் சுமார் 2.48 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மே 3 வரையிலான லாக்டவுன் காலத்தில் சுமார் 27,178 கோடி ரூபாய் அளவிலான வருவாய் இழப்பை மாநில அரசு சந்திக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய வருவாய்
ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயில் 15 முதல் 20 சதவீத வருவாய் மதுபான விற்பனை மூலம் கிடைக்கிறது. நடப்பு நிதியாண்டில் பஞ்சாப் மாநிலம் மதுபான விற்பனையின் வாயிலாக 6000 கோடி ரூபாய் அளவிலான வருவாய் ஈட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்தது.
தற்போது லாக்டவுன் பாதிப்பால் இந்த இலக்கை அடைய முடியாது எனத் தெரிகிறது.
உணவு பாதுகாப்பு 2006
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உணவு இருப்பதைப் போல், 2006 உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் மதுபானமும் சேர்க்கப்பட்டு உள்ளது. தற்போது ஊரடங்கு இருக்கும் காரணத்தால் மதுபானம் விற்பனை செய்யப்படவில்லை, இதனால் நாட்டின் பல பகுதிகளில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இது காவல்துறைக்குக் கூடுதல் சுமையாக உள்ளது என Indian Spirits & Wine Association of India (ISWAI) அமைப்பின் தலைவர் அம்ரித் கிரண் சிங் மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்திற்குச் சில வாரங்களுக்கு முன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு, மதுபான விற்பனைக்கு அனுமதி கொடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications