சரக்கு விற்பனையால் கஜானா நிரம்பியது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மதுபானம் விற்பனை மூலம் கிடைக்கும் வரி வருமானம் மிகவும் முக்கியமானதாக மாற்றியுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் மதுபான விற்பனையை அதிகரிக்கவும், அதேவேளையில் மதுபான விற்பனை மூலம் அதிக வரி வருமானம் பெற வேண்டும் என்றும் மாநில அரசு முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு உள்ளது.

இந்நிலையில் மதுபானம் மற்றும் பீர் விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், கர்நாடக அரசுக்கு அதிகப்படியான வரி வருமானம் கிடைத்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தை ஓரம்கட்டிய டாடா.. இந்திய நிறுவன ஆதிக்கத்தின் துவக்கமா..!!ஹூண்டாய் நிறுவனத்தை ஓரம்கட்டிய டாடா.. இந்திய நிறுவன ஆதிக்கத்தின் துவக்கமா..!!

 மதுபானம் மற்றும் பீர் விற்பனை

மதுபானம் மற்றும் பீர் விற்பனை

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பின்பு மக்கள் அதிகளவில் செலவு செய்த நிலையில், மதுபானம் மற்றும் பீர் விற்பனையும் அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மதுபான விற்பனை கடந்த ஆண்டை விடவும் சிறப்பாக இருந்த காரணத்தால் கர்நாடக மாநிலத்தில் கலால் வரி வசூல் உயர்ந்து கஜானா-வை நிரப்பியுள்ளது.

 42.725 மில்லியன் பெட்டி

42.725 மில்லியன் பெட்டி

கர்நாடகாவில் 2021 ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில் சுமார் 42.725 மில்லியன் பெட்டிகள் மதுபானமும், 15.6 மில்லியன் பீர் பாட்டில் பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது 2020ஆம் ஆண்டுக் காலத்தை விடவும் 6.8 மில்லியன் மதுபான பெட்டிகளும், 2.8 பீர் பாட்டில் பெட்டிகளும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

 கலால் வரி வசூல்
 

கலால் வரி வசூல்

இதன் மூலம் 2020 வருடத்தின் மொத்த கலால் வரி வசூலில் கர்நாடக அரசு நிர்ணயம் செய்திருந்த 24,580 கோடி ரூபாய் வரி இலக்கில் 79 சதவீதத்தை இந்த 9 மாத காலகட்டத்தில் அடைந்துள்ளது. மேலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மதுபானம் மற்றும் பீர் விற்பனை குறைந்துள்ளது எனக் கலால் வரித் துறை தெரிவித்துள்ளது.

 ஜூலை - செப்டம்பர் காலாண்டு

ஜூலை - செப்டம்பர் காலாண்டு

இந்த வருடம் மதுபானம் மற்றும் பீர் விற்பனை நாடு முழுவதும் சிறப்பாக இருந்த காரணத்தால் டிஸ்ட்டல்லர்ஸ், ப்ரீவர்ஸ், ரீடைல் விற்பனையாளர்கள் என அனைத்து தரப்பினரும் சிறப்பான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளனர். 2021ஆம் ஆண்டில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் தான் அதிகளவில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா?ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Liquor, beer sales peaks after covid impact: Karnataka 79 percent revenue target achieved in just 9 month

liquor, beer sales peaks after covid impact: Karnataka 79 percent revenue target achieved சரக்கு விற்பனையால் கஜானா நிரம்பியது..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X