தமிழ்நாட்டு மது பிரியர்கள் பயப்பட வேண்டாம், இந்த விலை உயர்வு டெல்லியின் தான். டெல்லி அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள எக்சைஸ் கொள்கை மூலம் மதுபானத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டும் அல்லாமல் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் மதுபானம் விற்பனை செய்யும் முறையும் மாறுபட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்புதிய மாற்றங்கள் மூலம் மதுபானத்தின் விலை குறைந்தபட்சம் 50 சதவீதம் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சித் தலைமையிலான டெல்லி மாநில அரசு அறிவித்துள்ள கலால் வரி உயர்வு மற்றும் புதிய மதுபான விற்பனை முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நிலையில் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் விற்பனை செய்யப்படும் மதுபானத்தின் விலை 50 சதவீதம் வரையில் அறியப்படுகிறது.
இப்புதிய வரி மற்றும் விற்பனை மாற்றம் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபான விற்பனை மூலம் 8000 கோடி ரூபாய் வரையிலான வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெல்லி அரசு 5000 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை மட்டுமே மதுபான விற்பனை மூலம் பெறுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டு அரசு மதுபானம் மீது புதிதாக வரி விதித்து அரசு வருமானத்தை உயர்த்த திட்டமிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.