பிரிட்டிஷ் அரசுக்கே கடன் கொடுத்த இந்திய குடும்பம்!! வட்டி குட்டி போட்டா இத்தனை கோடி வருதா?

பிரிட்டிஷ் அரசுக்கு சூரியன் மறைவே இல்லை என கூறும் அளவுக்கு உலகின் பல பகுதிகளிலும் பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்து வந்தது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் பல நூறு ஆண்டுகளாக பிரிட்டிஷார் ஆட்சி செய்தனர். அப்போது நம் வளங்களையும் சுரண்டி சென்றனர்.

அப்படிப்பட்ட பிரிட்டிஷ் அரசுக்கே ஒரு இந்திய குடும்பம் கடன் கொடுத்திருக்கிறது என்ற ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவருடைய வாரிசுகள் பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த கடனை திரும்ப வட்டியோடு தங்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என கேட்கின்றனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவேக் என்பவர் 1917 ஆம் ஆண்டு தன்னுடைய தாத்தா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு 35,000 ரூபாயை கடனாக கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டிஷ் அரசுக்கே கடன் கொடுத்த இந்திய குடும்பம்!! வட்டி குட்டி போட்டா இத்தனை கோடி வருதா?

இதுவரை பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த கடனை திரும்ப வழங்கவில்லை என்றும் தற்போது வட்டியோடு சேர்த்து அந்த தொகையை திரும்பத் தர வேண்டும் எனக் கூறி பிரிட்டிஷ் அரசுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக விவேக் தெரிவித்திருக்கிறார். அப்போது கொடுத்த 35 ஆயிரம் ரூபாயை தற்போது வட்டியோடு சேர்த்து 12 கோடி ரூபாய்க்கு மேல் வரும் என சொல்லப்படுகிறது.

பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு தன்னுடைய தாத்தா கடன் வழங்கியதற்கான ஆவணம் தன்னிடம் இருப்பதாக விவேக் பழைய ஆவணம் ஒன்றையும் காட்டுகிறார். மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உள்ள சேகோர் என்ற பகுதியில் உள்ள சேத் ஜும்மால் ருதையா என்ற நபரிடமிருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் 35,000 ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறது. 1917ஆம் ஆண்டில் ஜூன் 4ஆம் தேதி கடன் வாங்கியது அந்த ஆவணத்தில் இடம் பெற்றுள்ளது.

அந்த காலத்தில் அதாவது 100 ஆண்டுகளுக்கு முன்பு 35 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. அந்த பணத்தை வைத்து பிரிட்டிஷ்காரர்கள் போபாலில் தங்களின் ஆட்சியை வலுப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. போர் கடன் என்ற பெயரில் இந்த கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கடன் வாங்கியதோடு சரி அதனை திரும்ப தரவே இல்லை என குறிப்பிட்டு இருக்கின்றன.

சமீபத்தில் தான் இந்த ஆவணம் தங்களுக்கு கிடைத்ததாகவும் போர்க்கடன் என்ற பெயரில் இந்த கடன் வாங்கப்பட்டுள்ளது , பின்னர் கடன் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் விவேக் கூறியிருக்கிறார். 1937ஆம் ஆண்டிலேயே தன்னுடைய தாத்தா இறந்து விட்டார், அதன் பிறகு அந்த தொகை பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்காமல் சென்று விட்டது எனக் கூறியிருக்கும் விவேக் சர்வதேச சட்டங்களின்படி இந்த தொகையை திரும்ப பெறுவது சாத்தியமா என ஆய்வு செய்து வருவதாக கூறியிருக்கிறார்.

வட்டியோடு சேர்த்தால் தற்போது 12 கோடி ரூபாய்க்கு மேல் அந்த தொகை வரும் என சொல்லப்படுகிறது. வழக்கறிஞர்கள் இந்த கடனை திரும்ப பெறுவது சட்ட சிக்கல்கள் நிறைந்தது என்கின்றனர். இருந்தாலும் தங்களிடம் ஆவணங்கள் இருப்பதால் லீகல் நோட்டீஸ் அனுப்பி பணத்தை திரும்ப பெறுவதில் உறுதியாக இருப்பதாக கூறுகின்றனர் விவேக் குடும்பத்தினர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+