உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று லண்டனில் இருக்கும் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்திலிருந்து தினசரி அடிப்படையில் நூற்றுக்கணக்கான விமானங்கள் வெவ்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது. லண்டனில் உள்ள ஒரு மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இந்த விமான நிலையம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை மூடப்படவுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் தீ விபத்து ஏற்பட்ட மின் நிலையத்திலிருந்து தான் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. தற்போதைய இந்த மூடல் காரணமாக பல பயணிகள், பயண தாமதங்களை எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தற்போது 120 விமானங்கள் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன. ஒன்று அவை வேறு விமான நிலையங்களில் தரையிறங்கலாம் அல்லது அவை எந்த ஊரில் இருந்து கிளம்பியதோ அதே இடத்திற்கு திரும்பலாம் என கூறப்படுகிறது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத் துறையினர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மின்சாரம் எப்போதும் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று ஹீத்ரோ விமான நிலையத்தில் இருக்கும் செய்தி தொடர்பாளர் ஒருவர் ரைட்டர்சுக்கு மெயில் அனுப்பியுள்ளார். அடுத்த சில நாட்களில் இதன் காரணமாக பெரிய இடையூறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். "எங்கள் பயணிகள் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பை பராமரிக்கும் விதமாக மார்ச் 21ஆம் தேதி அன்று 23:59 மணி வரை ஹீத்ரோ மூடப்படும்", என்று விமான நிலையம் சார்பில் X பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த தீ விபத்தின் காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்தில் இன்று தரையிறங்க வேண்டிய 679 விமானங்கள் வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதேபோல 678 விமானங்கள் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட இருந்தன. 1350-க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மட்டும் ஹீட்ரோ விமான நிலையத்தின் மூலம் 2,20,000-த்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர். சுமார் 90 விமான நிறுவனங்களுடன் உலக அளவில் 180-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பலர் பயணம் செய்திருக்கின்றனர். வெள்ளிக்கிழமை காலை வியட்நாம், இந்தியா, புருனே போன்ற இடங்களில் இருந்து விமானங்கள் வர இருந்தன. அதே நேரம் பயணிகள் டோக்கியோ, நியூயார்க் மற்றும் ரியாத் போன்ற இடங்களுக்கு புறப்பட தயாராக இருந்தனர். ஆனால் திடீரென ஏற்பட்ட மின்தடை பல விமானங்களை திருப்பி அனுப்ப வழி வகுத்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications