இந்தியாவின் சரக்குப் போக்குவரத்தில் மிக முக்கியமானதாக விளங்குவது லாரிகள் தான், சிறிது பெரிது எனத் தமிழ்நாட்டில் சரக்கு லாரி போக்குவரத்து நிறுவனங்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, தருமபுரி, திருச்சி ஆகிய மாவட்டத்தில் சரக்கு லாரி சார்ந்த வர்த்தகம் சற்று அதிகம்.
குமரியில் இருந்து காஷ்மீர் வரையில் தமிழ்நாட்டு லாரிகள் சரக்குப் போக்குவரத்தில் ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்துறை வர்த்தகத்தை நம்பியிருப்போர் டிசல் விலை உயர்வால் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வரும் காரணத்தால் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
டீசல் விலை பாதிப்பு
தென் பிராந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் நல அமைப்பு மத்திய மற்றும் மாநில அரசை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் எனத் தீர்க்கமான கோரிக்கையை வைத்துள்ளது. இல்லையெனில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஈரோடு
இந்நிலையில் இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா ஈரோட்டில் பேசிய போது, கடந்த ஒரு வருடத்தில் டீசல் விலை 36 முறை அதிகரிக்கப்பட்டுச் சுமார் 28 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
26 லட்சம் சரக்கு லாரிகள்
தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் சுமார் 26 லட்சம் சரக்கு லாரிகள் உள்ளது, இதில் 7 லட்சம் லாரிகள் மட்டுமே அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. டீசல் விலை உயர்வால் 40 சதவீத சரக்கு லாரிகள் இயங்க முடியாத நிலை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசு
இந்நிலையில் டீசல் விலையைக் குறைக்க மத்திய மாநில அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளோம், ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் டீசல் விலையைக் குறைக்கவில்லை எனில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க உள்ளோம் என .சண்முகப்பா ஈரோட்டில் தெரிவித்துள்ளார்.
முக.ஸ்டாலின்
இதேபோல் முதல்வர் முக.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் டீசல் விலையை 4 ரூபாய் வரையில் குறைக்க உள்ளதாக அறிவித்தார். அந்த அறிவிப்பை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனவும் சண்முகப்பா கேட்டுக்கொண்டு உள்ளார்.
571 சுங்கச்சாவடி
மேலும் இந்தியாவில் தற்போது 571 டோல் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடியின் உரிமங்கள் காலம் முடிந்துள்ளது, ஆனாலும் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த 571 சுங்கச்சாவடியில் 33 சுங்க சாவடி தமிழ்நாட்டில் உள்ளது.
நாடு முழுவதும் போராட்டம்
மத்திய அரசு இதுகுறித்து விரைவில் டோல் பிளாசா உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் கட்டாயம் நாடு முழுவதும் இருக்கும் லாரி உரிமையாளர்கள் அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications