இந்தியாவில் அம்பானி, டாடா, அதானி, பிர்லா, பிராமல், ஷாபூர்ஜி, காட்ரேஜ் என பல வர்த்தக குழுமங்கள் இருந்தாலும் ஒரு சில வர்த்தக சாம்ராஜ்ஜியம் மட்டுமே தலைமுறையை தாண்டி இயங்கி வருகிறது. அப்படியொரு வர்த்தக சாம்ராஜ்ஜியம் தான் வாடியா குழுமம்.
இந்தியாவின் பழமையான தொழில் குழுமமான வாடியா குரூப் தொடங்கப்பட்டு 290 வருடங்களாகியுள்ளது. லவ்ஜி நுஸர்வாஞ்சி வாடியா இந்த நிறுவனத்தை நிறுவினார். அதன் பிறகு பல பெருமைக்குரிய நிறுவன குரூப்கள் இந்தியாவில் தோன்றி விட்டன. டாடா குரூப், கோத்ரெஜ் போன்றவை பழமை வாய்ந்த நிறுவனங்களில் அடங்கும்.

வாடியா குரூப் எப்போது நிறுவப்பட்டது?: இந்தியாவின் பழமைவாய்ந்த தொழில் குழுமமான வாடியா குரூப் 1736 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் துணை நிறுவனமான பம்பாய் பர்மா டிரேடிங் கார்ப்பொரேஷன் லிமிடெட் 1863 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதுதான் இந்தியாவில் பழமையான பொது சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்ட கம்பெனி ஆகும்.
வாடியா குரூப்பை நிறுவியவர் யார்?: வாடியா குரூப்பை 1736 ஆம் ஆண்டில் லவ்ஜி நுஸர்வாஞ்சி வாடியா ஆரம்பித்தார். பிரிட்டிஷாருக்கு கப்பல்களைக் கட்டித்தரும் மெரைன் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியை அவர் தொடங்கினார். கப்பல் கட்டும் தொழிலில் ஒரு முன்னோடியாக விளங்கிய வாடியா இந்தியாவின் முதல் மாஸ்டர் ஷிப் பில்டர்களில் ஒருவர் ஆவார்.
வாடியாவின் வாழ்க்கை: லவ்ஜி நுஸர்வாஞ்சி வாடியா 1702 ஆம் ஆண்டில் குஜராத்தின் சூரத் பகுதியைச் சேர்ந்த பார்ஸி குடும்பத்தில் பிறந்தார். ஆசியாவின் முதல் டிரை-டாக்கான பாம்பே டிரை-டாக்கை லவ்ஜியும் அவரது சகோதரர் சோராப்ஜியும் 1750 ஆம் ஆண்டில் கட்டினர்.
மும்பையின் ஷிப்பிங் மற்றும் ஷிப் பில்டிங் துறையின் நிறுவனர் என்று மரியாதையுடன் வாடியா வழங்கப்படுகிறார். 1760 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதல் அடாஷ் ஆதாரன் சூரத்துக்கு அருகிலுள்ள சிகன்பூரில் லவ்ஜி வாடியாவால் நிறுவப்பட்டது.
வாடியா வழித்தோன்றல்கள்: நெவில் வாடியா, நுஸ்லி வாடியா, நெஸ் வாடியா, ஜஹாங்கீர் வாடியா. அவரது கொள்ளுப் பேரன்களான ஜேபிஹெச் வாடியா மற்றும் ஹோமி வாடியா 1933 இல் வாடியா மூவிடோனை நிறுவினர், அதன் ஸ்டுடியோக்கள் மும்பை செம்பூரில் உள்ள லோவ்ஜி கோட்டையில் (லவ்ஜி கோட்டை) இருந்தது. ஒரு கப்பலை வாடியா நிறுவனம் தனது லோகோவாக கொண்டிருந்தது.
வாடியா குழுமம் எஃப்எம்சிஜி, ரியல் எஸ்டேட், ஜவுளி, ரசாயனங்கள், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பலதரப்பட்ட தொழில்களில் முன்னிலையில் உள்ளது. பாம்பே டையிங் முதல் கோ ஃபர்ஸ்ட் வரை, இந்தியாவின் மிகப் பழமையான வணிகக் குழுவின் கீழ் வரும் நிறுவனங்களின் பட்டியல் இங்கே:
கோ ஃபர்ஸ்ட் , பாம்பே டையிங், பிரிட்டானியா, பாம்பே ரியாலிட்டி, வாடியா டெக்னோ-இன்ஜினியரிங் சர்வீஸஸ், பம்பாய் பர்மா, நேஷனல் பெராக்சைடு, மெடிக்கல் மைக்ரோ டெக்னாலஜி, டென்டல் புராடக்ட்ஸ், இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ஆர்த்தோபீடிக்ஸ்.
தற்போது வாடியா குழுமத்தின் தலைவர் யார்?: $6 பில்லியன் நிகர மதிப்புடன் (ஃபோர்ப்ஸ் படி), நுஸ்லி வாடியா தற்போது வாடியா குழுமத்தின் தலைவராக உள்ளார். இவர் பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் பேரன் ஆவார். வாடியா பல சட்டப் போராட்டங்களை நடத்தியதற்காக இந்திய பத்திரிகைகளால் கார்ப்பரேட் சாமுராய் என்று குறிப்பிடப்படுகிறார்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications