கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி வந்தாலே சமையல் கேஸ் விலை எவ்வளவு ரூபாய் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 1000 ரூபாய்க்கு மேல் தற்போது விற்பனையாகும் நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக புதிதாக சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெபாசிட் உயர்வு
ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே சமையல் கேஸ் சிலிண்டர் வாங்கியவர்களுக்கு எந்த டெபாசிட் உயர்வும் கிடையாது என்றும் புதிதாக வாங்குபவர்களுக்கு மட்டுமே டெபாசிட் தொகை அதிகரித்துள்ளதாகவும் வெளிவந்திருக்கும் செய்தி ஏற்கனவே சிலிண்டர் கனெக்சன் வைத்திருப்பவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு உயர்வு?
இதுவரை புதிதாக சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு டெபாசிட் தொகையாக ரூபாய் 1,450 பெறப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிதாக சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குபவர்கள் ரூ.2200 டெபாசிட் கட்ட வேண்டும். இது ஒரு சிலிண்டர் மட்டும் வாங்குபவர்களுக்கு பொருந்தும்.
2 சிலிண்டர்
ஆனால் அதே நேரத்தில் 2 கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறுபவர்களுக்கான டெபாசிட் தொகை இதுவரை 2,900 ஆக இருந்தது என்பதும், இனிமேல் புதிதாக 2 சிலிண்டர் வாங்குபவர்களுக்கு டெபாசிட் தொகையை 4600 என மத்திய அரசு உயர்த்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பு
இந்த டெபாசிட் உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளும் இந்த கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் அரசு
முதல் முறையாக சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கு டெபாசிட் முறையை கடந்த 2012ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. அப்போது சிலிண்டர் இணைப்பு வழங்குவதற்கு டெபாசிட்டா? என கடும் எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளில் முக்கியமான கட்சி பாரதிய ஜனதா என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக அரசு
ஆனால் தற்போது பாரதிய ஜனதா கட்சி கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ஏற்றியது போதாது என்று தற்போது டெபாசிட் தொகையையும் உயர்த்தி உள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications